அரச துறையை எதிர்பார்க்காது தனியார் துறைகளில் இணைக!
யாழ்ப்பாணத்தில் உயர்தரம் படித்தவர்கள் 14 ஆயிரம் பேர் உள்ளனர் எனில் அவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க முடியாது. தற்போது ஆண்டின் அரைவாசி நாள்கள் விடுமுறை நாள்களாகவே உள்ளன.
உண்மையில் திறமையான ஒருவர் அரச துறையில் இணைந்து பணியாற்றிப் பெறும் சம்பளத்தை விட தனியார் துறையில் இணைந்து திறமையை நிரூபித்தால் அதிக சம்பளம் பெற முடியும். எனினும் அனைவரும் அரச துறையையே எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.
தொழில்துறை, மனிதவலு வேலை வாய்ப்பு அமைச்சின் அலுவலகம் நேற்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் கட்டடத் தொகுதியில் இந்த அலுவலகம் திறக்கப்ப ட்டுள்ளது.குடாநாட்டில் உள்ள இளையோர்கள் இங்கே பதியப்படும் வேலைவாய்ப்புக் கோரும் விவரம் இணையம் மூலம் தரவேற்றம் செய்யப்பட்டு வெற்றிடம் உள்ள தகவல்களை உரிய விண்ணப்ப தாரிகளுக்கும் பணியாளரைக் கோருவோருக்கும் வழங்கவும் வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பதிவுகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் குடாநாட்டில் வேலை வாய்ப்புள்ள அரச மற்றும் தனியார் துறை விவரங்களை அலைபேசிகளுக்குத் குறுந்தகவல் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது;-
அரச துறையில் ஓய்வூதியம் பெற முடியும். ஆனால் ஒரு மாவட்டச் செயலர் பெறும் மொத்தச் சம்பளத்தை விட அதிகமாகத் தனியார் துறையில் உழைக்கின்றனர். ஆனால் அது பலருக்குத் தெரிவதில்லை. தனியார் துறையை விரும்பாத வர்கள் சுயதொழிலில் ஈடுபடலாம். இன்று தனியார் துறையில் அதிக வேலை வாய்ப்புக்கள் உள்ளன.
30 ஆண்டு காலப் போரால் அழிவடைந்த தொழிற்சாலைகளைச் சிரமைப்பதில் சில அரசியல் நெருக்கடிகளும் உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்டளவு பணம் வெளிநாடுகளில் இருந்து வருகின்றது. அவற்றைக் கொண்டு ஆடம்பர வாழ்வு வாழ்வதை விடுத்து அந்தப் பணத்தில் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் – என்றார்.
#Raventhira-samarveera #jaffna #srilanka #tamilnews
உண்மையில் திறமையான ஒருவர் அரச துறையில் இணைந்து பணியாற்றிப் பெறும் சம்பளத்தை விட தனியார் துறையில் இணைந்து திறமையை நிரூபித்தால் அதிக சம்பளம் பெற முடியும். எனினும் அனைவரும் அரச துறையையே எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.
தொழில்துறை, மனிதவலு வேலை வாய்ப்பு அமைச்சின் அலுவலகம் நேற்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் கட்டடத் தொகுதியில் இந்த அலுவலகம் திறக்கப்ப ட்டுள்ளது.குடாநாட்டில் உள்ள இளையோர்கள் இங்கே பதியப்படும் வேலைவாய்ப்புக் கோரும் விவரம் இணையம் மூலம் தரவேற்றம் செய்யப்பட்டு வெற்றிடம் உள்ள தகவல்களை உரிய விண்ணப்ப தாரிகளுக்கும் பணியாளரைக் கோருவோருக்கும் வழங்கவும் வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பதிவுகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் குடாநாட்டில் வேலை வாய்ப்புள்ள அரச மற்றும் தனியார் துறை விவரங்களை அலைபேசிகளுக்குத் குறுந்தகவல் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது;-
அரச துறையில் ஓய்வூதியம் பெற முடியும். ஆனால் ஒரு மாவட்டச் செயலர் பெறும் மொத்தச் சம்பளத்தை விட அதிகமாகத் தனியார் துறையில் உழைக்கின்றனர். ஆனால் அது பலருக்குத் தெரிவதில்லை. தனியார் துறையை விரும்பாத வர்கள் சுயதொழிலில் ஈடுபடலாம். இன்று தனியார் துறையில் அதிக வேலை வாய்ப்புக்கள் உள்ளன.
30 ஆண்டு காலப் போரால் அழிவடைந்த தொழிற்சாலைகளைச் சிரமைப்பதில் சில அரசியல் நெருக்கடிகளும் உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்டளவு பணம் வெளிநாடுகளில் இருந்து வருகின்றது. அவற்றைக் கொண்டு ஆடம்பர வாழ்வு வாழ்வதை விடுத்து அந்தப் பணத்தில் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் – என்றார்.
#Raventhira-samarveera #jaffna #srilanka #tamilnews
கருத்துகள் இல்லை