சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர் கைது!

வெலிகட பகுதியில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தாக நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமல் வெலிகட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் கடமை புரிந்து கொண்டிருந்த போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.