கிளிநொச்சியில் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி!

கிளிநொச்சி - அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் பணியாளர் ஒருவர் சக பணியாளர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் குறித்த பெண் நேற்று கடமை நேரத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது, உடனடியாக செயற்பட்ட ஏனைய பணியாளர்கள் அவரை காப்பாற்றி அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாட்ட வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் குறித்த பெண், பணியின் நிமித்தம் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கடந்த சில நாட்களாக மனச் சோர்வுக்கு உட்பட்டிருந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என சக பணியாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே, ஒரு மாதத்திற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் ஒரு பணியாளர் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#kilinochchi   #jaffna  #srilanka  #tamilnews  #akkarajan_  #hospital

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.