கத்தோலிக்க தேவாலயத்தின் மதிலில் விசமிகளால் எழுதப்பட வசனத்தால் சர்ச்சை!

மன்னார் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய வளாகத்தில் மதில் சுவர்களில்  ஞாயிற்றுக்கிழமை23-09-2018 இரவு இனந்தெரியாத விசமிகளால்
"எங்க ஊரு"  "எங்க கெத்து" என எழுதப்பட்டு சுவர்கள்


சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக
ஆலய நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் 24-09-2018  திங்கட்கிழமை காலை  முறைப்பாடு செய்துள்ளனர்.

  நீண்ட காலமாக குறித்த  ஆலயம் பல்வேறு தாக்குதல்  சம்பவங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ள நிலையிலே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.


 அண்மைய திருவிழாவின் போது இந்த  மதில்கள் புனரமைப்பு செய்யப்பட்டு அழகான முறையில் அமைக்கப்பட் நிலையிலே  ஞாயிற்றுக்கிழமை23-09-2018 இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகம் மன்னார் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதோடு,குறித்த செயற்பாட்டினை கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகம் வண்மையா கண்டித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.