வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனுக்கு மாம்பழத் திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22 ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழத் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கும் தேர்த்திருவிழா நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.
#nallur   #srilanka   #tamilnews  #temple   #hindu

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.