கட்சி சார்பற்று இயங்கும் பொதுவேட்பாளரே தேவை!
நாட்டுக்குப் பொது வேட்பாளர் ஒருவரே மீளவும் தேவை என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டுக்கு மீளவும் அரச தலைவர் வேட்பாளராகப் பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. கட்சி சார்பற்ற ஒருவரே இவ்வாறு பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெற்றியீட் டிய பொது வேட்பாளர், கட்சி சார்பானவர் என்ற காரணத்தினால் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவில்லை. எனவே கட்சி சார்பற்ற பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பல்வேறு குற்றச்செயல்கள், மோசடிகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் போது தற்போதைய அரச தலைவர் அலைபேசி அழைப்புக்களை மேற்கொள்கின்றார். இதன் மூலம் அவரது நடுநிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைமை அமைச்சர் அரச நிர்வாகத்தின் உயர் பதவிகளில் தனது நெருங்கிய நண்பர்களை அமர்த்தியுள்ளார். இதனால் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலமை உருவாகியுள்ளது. ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளாத, வாகன அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத, கட்சி சார்பற்ற ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். மறைந்த சோபித தேரரின் அணுகுமுறைக்கு அமைய இவ்வாறான வேட்பாளர் ஒருவர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்– என்றார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டுக்கு மீளவும் அரச தலைவர் வேட்பாளராகப் பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. கட்சி சார்பற்ற ஒருவரே இவ்வாறு பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வெற்றியீட் டிய பொது வேட்பாளர், கட்சி சார்பானவர் என்ற காரணத்தினால் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவில்லை. எனவே கட்சி சார்பற்ற பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பல்வேறு குற்றச்செயல்கள், மோசடிகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் போது தற்போதைய அரச தலைவர் அலைபேசி அழைப்புக்களை மேற்கொள்கின்றார். இதன் மூலம் அவரது நடுநிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைமை அமைச்சர் அரச நிர்வாகத்தின் உயர் பதவிகளில் தனது நெருங்கிய நண்பர்களை அமர்த்தியுள்ளார். இதனால் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலமை உருவாகியுள்ளது. ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளாத, வாகன அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத, கட்சி சார்பற்ற ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். மறைந்த சோபித தேரரின் அணுகுமுறைக்கு அமைய இவ்வாறான வேட்பாளர் ஒருவர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்– என்றார்.
கருத்துகள் இல்லை