தமி­ழர்­கள் நம்பி ஏமாந்த மைத்­தி­ரியே ??

தமிழ் பேசும் மக்­கள் நம்பி ஏமாந்த கடை­சிச் சிங்­க­ளத் தலை­வ­ராக மைத்­தி­ரி­பா­லவே இருப்­பார் என்­பதை வர­லாறு சுட்­டிக்காட்­டும்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங் கம் தெரி­வித்­துள்­ளார்.

ஐக்­கிய நாடு­கள் சபை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆற்­றிய உரை தொட­ரில் அவர் அனுப்­பி­யுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அதில் உள்­ள­தா­வது,

இலங்­கை­யில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ரம், பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்­கு­தல் தொடர்­பாக மைத்­திரி தனது உரை­யில் மூச்­சுக் கூட விட­வில்லை.

அவர் தனது உரை­யில் புத்த பக­வா­னின் போதனை ஒன்­றைச் சுட்­டிக் காட்டி ஒரு­வ­ரின் உட­லில் ஒரு முள் பாய்ந்­தி­ருப்­பின் அத­னால் ஏற்­ப­டும் வேத­னை­யைப் போலவே அந்த முள் பாய்ந்­த­தால் வேதனை ஏற்­பட்­டது என்ற சிந்­த­னை­யும் ஞாப­க­மும் கூட வேத­னை­யை­யும் ஏற்­ப­டுத்­தும் எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

தமிழ் மக்­க­ளின் பல்­லா­யி­ரக் கணக்­கான உயி­ரி­ழப்­புக்­கள் அவய இழப்­புக்­கள், உற­வு­களை இழந்­தமை, சொத்­துக்­களை இழந்­தமை பற்றி வேத­னை­ய­டைந்­தது மட்­டு­மல்­லா­மல், சிந்­த­னை­யும், ஞாப­க­மும் வேத­னை­ய­டைந்து தரும் என எமது மக்­க­ளின் வேத­னையை ஐக்­கிய நாடு­கள் சபை­யில் சுட்­டிக் காட்­டி­ய­மைக்கு தமிழ் மக்­க­ளின் சார்­பில் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்­ளேன்.

ஆனால் தமிழ் பேசும் மக்­கள் நம்பி ஏமாந்த கடை­சிச் சிங்­க­ளத் தலை­வ­ராக நீங்­கள் மட்­டுமே இருப்­பீர்­கள் என்­பதை வர­லாறு சுட்­டிக் காட்­டும் என நம்­பு­கின்­றேன்.

ஏனெ­னில் இலங்­கை­யில் இனி­மேல் போர் வேண்­டாம் என்று கூறி­யி­ருக்­கி­றார். போருக்­காக கார­ணி­யாக தமிழ்த் தேசிய இனப் பிரச்­சி­னைக்­கான ஆணி வேர் எது என்­பதை ஏற்­றுக் கொள்­ளா­மல் தேசிய நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டாது என்­பதை அரச தலை­வர் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

பலஸ்­தீன மக்­க­ளின் பிரச்­சினை பற்­றிக் குறிப்­பிட்டு அந்த மக்­க­ளுக்கு இலங்­கை­யில் ஆத­ரவு என்­றும் உள்­ளது போல் தொட­ரும் என­வும் தெரி­வித்­தி­ருந்­தார். பலஸ்­தீன மக்­க­ளின் பிரச்­சி­னை­யைப் போலவே தமிழ் பேசும் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளும் உள்­ளதை ஏன் மறந்து போகி­றார் எனத் தெரி­ய­வில்லை.

வௌிநாட்­டுத் தலை­யீடு தேவை­யில்லை. எமது பிரச்­சி­னை­களை நாமே தீர்த்­துக் கொள்­வோம் என்று அரச தலைர் கூறி­யி­ருக்­கின்­றார். இந்த உரை நியூ­யோர் நக­ரில் இருந்து இலங்கை சிங்­கள மக்­க­ளுக்­கான, சிங்­கள வாக்­க­ளர்­க­ளுக்­கான உரை­யா­கவே பார்க்­கப்­பட முடி­யும்.

அப்­ப­டி­யென்­றால் தமிழ்த் தேசிய இனம் தனது தலை­வி­தி­யைத் தாமே தீர்­மா­னிக்க இடம்­கொ­டுக்க அரச தலை­வர் தயாரா?. எமது தலை­வி­தியை நாமே தீர்­மா­னிக்க ஐக்­கிய நாடு­கள் சபை­யின் ஆத­ரவை நாம் கோரு­வது தவ­றல்ல என்­பது அரச தலை­வர் உரை மூலம் நாம் உணர்ந்து கொள்­ளக் கூடி­ய­தாக உள்­ளது.

2015ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாத கூட்­டத் தொட­ரில் ஐக்­கிய நாட­கள் மனித உரி­மைப் பேர­வை­யில் போர்க் குற்­றங்­க­ளுக்­கா­க­வும், ஏனைய குற்­றங்­க­ளுக்­கு­மான விசா­ர­ணையை இலங்கை அரசே வௌிநாட்டு நீதி­பதி (பொது­ந­ல­வாய நாடு­க­ளின் நீதி­கள் உட்­பட) வழக்­குத் தொடு­நர்­கள், விசா­ணை­யா­ளர்­கள், வழக்­க­றி­ஞர்­கள் அடங்­கிய விசா­ர­ணையை நடத்­து­வ­தற்கு 30/1 தீர்­மா­னம் மூலம் ஏற்­றுக் கொண்­டி­ருந்­தது.

பின்­னர் அவற்­றைச் செயற்­ப­டுத்­த­மாட்­டோம் என அரச தலை­வர், தலைமை அமைச்­சர், மூத்த அமைச்­சர்­கள் பகி­ரங்­க­மாக இலங்­கைக்கு தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அர­ச­த­லை­வ­ருக்கு துணிச்­சல் இருந்­தி­ருந்­தால் முது­கெ­லும்பு இருந்­தி­ருந்­தால் ஐக்­கிய நாடு­கள் பொதுச்­ச­பை­யில் உரை­யாற்­றி­ய­போது போர்க்­குற்­றங்­களை நாங்­கள் விசா­ரிக்­க­மாட்­டோம் என்று கூறி­யி­ருக்க வேண்­டும்.

இலங்­கை­யில் நடை­பெற்ற போர்க்­குற்­றங்­கள், இனப் படு­கொ­லை­கள், விசா­ர­ணை­களை ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை தமது வேண்­டு­கோளை ஐக்­கிய நாடு­கள் பொதுச்­சபை ஊடாக ஐக்­கிய நாடு­கள் பாது­காப்­புச் சபைக்கு அனுப்­பி­வைத்து பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்கு அல்­லது பன்­னாட்டு குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யத்­துக்கு (ict) பாரப்­ப­டுத்­த­பட வேண்­டும் எனக் கோரப்­பட வேண்­டும் என்­பதே பாதிக்­கப்­பட்ட தமிழ் பேசும் மக்­க­ளின் சார்­பில் எமது நிலைப்­பா­டா­கும்.

இலங்­கைக்­குள் அர­சி­யல் தீர்வு கிடைக்­காது என்­பதை சொல்­லா­மல் அரச தலை­வர் சொல்­லி­யுள்­ளார். அத­னால் தமிழ் பேசும் மக்­க­ளின் அர­சி­யல் அபி­லா­சை­கைளை நிறை­வேற்­று­வ­தற்­காக வடக்கு கிழக்­குப் பிராந்­தி­யத்­தில்­பொ­து­சன வாக்­கெ­டுப்பு ஒன்றை ஐக்­கிய நாடு­கள் சபை தமது மேற்­பார்­வை­யில் நடத்த வேண்­டும் எனக் கோரு­கின்­றோம். இந்த நிலைப்­பாட்­டின் நியா­யத் தன்­மையை பன்­னா­டு­கள் புரிந்து கொள்­ளும் என நம்­பு­கி­றோம். – என்­றுள்­ளது.

#mathiri #jaffna  #tamil  #tamilnews  #srilanka  #sivaijilingam

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.