கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது நா.சிறிகாந்தா சீற்றம்!
இணைப்பாட்சிக்கு (சமஷ்டி) எதிராகப் பொய்ப் பரப்புரை செய்த ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன் அதே இணைப்பாட்சிக் கோரிக்கையைக் கையில் எடுத்துக்கொண்ட எம்மைப் பார்த்துக் கேள்வி கேட்கின்றது என்று சாடியிருக்கிறார் ரெலோ கட்சியின் செயலாளர் நா.சிறிகாந்தா.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைகுழு கூட்டம் நேற்றுக் காலை 10.30 மணிக்கு வவுனியாவில் உள்ள அதன் காரியாலத்தில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது.
கடந்த சில நாள்களாக இணைப்பாட்சி பற்றி வெளிப்பட்டுவரும் கருத்துக்கள் தொடர்பாக கட்சியின் உயர்மட்டக் குழு நேற்றுக் கூடி ஆராய்ந்தது. அதன் பின்னர் 12 மணியளவில் தனியார்விடுதி ஒன்றில் ஊடகச் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. அங்கு சிறிகாந்தா தெரிவித்ததாவது:
கூட்மைப்பு பங்கெடுத்த அனைத்துத் தேர்தல்களிலும் இனப்பிரச்சினையை இணைப்பாட்சி என்றுஅழைக்கபடும் சமஸ்டிமுறையின் கீழ்தீர்க்க வேண்டும்; தீர்கப்படமுடியும் என்பதனை தொடர்ந்துவலியுறுத்தி வந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சுமந்திரன் உரையாற்றினார் என்று தெரிவித்துஊடகங்களில் வந்திருக்கின்ற செய்தி தொடர்பாகப் பல கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன
தமிழ்தேசியஇனத்திற்கு அதனுடைய மரபு வழித் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசத்தை ஒரு தனி நாடாக மாற்றிடவேண்டும் என்ற அரசியில் இலக்கோடு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த எமது தமிழீழ விடுதலை இயக்கம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தபோதும் அதனை இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக ஏற்றுக்கொண்டதில்லை.
அதனால் கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தத்தைக்கூட நாம் ஒரு தொடக்கப் புள்ளியாகவே கருதிவந்திருக்கிறோம். 13ஆம் திருத்தம் இன்பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்பதனை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மொழி வழி மாநிலமாக முழுமையான சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட மாநிலமாக இணைப்பாட்சிமுறையின் கீழ் நிறுவப்பட்டு இலங்கை ஒருநாடு என்ற வரையறைக்குள்ளே அரசியல் தீர்வு ஒன்றினைக் காணவேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
அந்தத் தீர்வைகாண முடியுமா என்று பல்வேறுசந்தர்பங்களில் கேள்விக்குட்பட்டாலும் அந்தநம்பிக்கையை நாம் இன்னும்முற்றுமுழுதாக இழந்துவிடவில்லை.
இந்த முயற்சியானது தொடர்ந்துகாலத்தை இழுத்தடிக்கும்படியாக இல்லாமல் விரைவாக இந்த வருட இறுதிக்குள்ளே நிறைவேற்றபடவேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கிறது.
இந்தப் பின்னணியிலே இணைப்பாட்சியை கூட்டமைப்பு கைவிட்டுள்ளது, அதன் பங்காளியான டெலோ அதிலிருந்து விலகிவிட்டது என்கின்ற எந்த ஒரு குற்றசாட்டுக்கும் இடமிருக்காது என்பதை நாம் அழுத்தம்திருத்தமாக கூறிவைக்கவிரும்புகின்றோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு இணைப்பாட்சிமுறையில் வழங்கப்படாவிடில் எமதுமக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணயஉரிமையை முன்நிறுத்தி தேசியஇனம் என்றமுறையிலே எமது பிரச்சினையை பன்னாட்டரங்கின் முன் நிறுத்தி எமது தலைவிதியை நாங்களே தீர்மானிக்கும் வாய்ப்புதரப்படவேண்டும் என்று கோருவதற்கு எமதுகட்சி பின்னிற்கமாட்டாது.
எமது பொறுமைசோதிக்கபட்டுக்கொண்டிருக்கிறது.இலங்கை சிங்கள பௌத்த நாடென்ற மனநிலையி ல்இருந்து சிங்களத் தலைமை தன்னைமுற்றாக விடுவித்துக் கொள்ளவில்லை.
யார் என்ன விமர்சித்தாலும் இனப் பிரச்சினைக்கு இணைப்பாட்சிதான் தீர்வு என்கிற நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு மாறப்போவதில்லை.
இணைப்பாட்சி தொடர்பாக காலியிலே சுமந்திரன் பேசிய விடயம் தொடர்பாக எமது இயக்கத்தின் தலைவர் அடைக்கலநாதன், புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலாக சுமந்திரன் தெரிவித்தகருத்துக்களை நாம் முற்றுமுழுதாக அடியோடு நிராகரிக்கின்றோம். அத்துடன் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
சுமந்திரன் பல விளக்கங்களைச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் கூட நாம்தெளிவாகசொல்லவிரும்புகிறோம், ஆடைக்லநாதனோ சித்தார்தனோ இன்று நேற்றுஅரசியலுக்கு வந்தவர்கள் அல்லர்.
நீண்ட காலமாகப் பயணித்துகொண்டிருப்பவர்கள் அவர்கள் சிறு வயதிலே ஆயுதப் போராட்டத்திற்கு தம்மைஅர்பணித்வர்கள் இத்தகைய தலைவர்களுக்கு இணைப்பாட்சி பற்றிய அறிவு இல்லை என்று எவராவது சொன்னால் அந்தக் கருத்து முழுக்கமுழுக்க அபத்தமான கருத்தாகவே இருக்கமுடியும்.
இப்போது கூட்டமைப்பை விமர்சிக்கும் கஜேந்திரகுமார் ஒன்றை மறந்துவிட்டார். அவருடைய தமிழ்காங்கிரஸ் கட்சி அவரதுபாட்டனாரால் வழிநடத்தப்பட்ட காலத்தில் இணைப்பாட்சிக்கு எதிராக எத்தகைய பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டார் என்பது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு அது புரியும். சமஸ்டிக்கு எதிராகப் பித்தலாட்டக் கதைகளைக் கூறி பொய்ப் பரப்புரை செய்த பெரிய பொன்னம்பலத்தின் இன்றய அரசியல் வாரிசு இன்று இணைப்பாட்சிக் கோரிக்கையைக் கையிலேவைத்துக்கொண்டு எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்.
அவருக்கு ஒன்று கூறிக்கொள்ளவிரும்புகிறேன் எமதுஉறுப்பினர்கள் மாடிவீடுகளில்இருந்தும், கூடகோபுரங்களில் இருந்தும் அரசியலுக்கு வந்தவர்கள் அல்லர். போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது சீமைகளிலே படித்துக்கொண்டு வேறுவிடயங்களில் ஈடுபட்டவர்களும் அல்லர்.
ஒற்றையாட்சி தத்துவத்தை ஏற்றுகொண்டமையினாலேயே குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை ரெலோ வகிப்பதாக கயேந்திரகுமார் கூறினார். அவரை பார்த்து நான் கேட்கிறேன், நீங்களும் நாடாளுமன்றத்தில் இரண்டு தடவைகள் பதவி வகித்தீர்களே, நீங்களும் ஒற்றையாட்சியை ஏற்றுகொண்டுதானா பதவியை வகித்தீர்கள்? இந்தக் கேள்வி அவருக்குப் புரியும் என்று நினைக்கின்றேன். சிறுபிள்ளைத் தனமான கேள்விகளைச் சட்டம் படித்த கயேந்திரகுமார் எழுப்பக்கூடாது – என்றார்.
‘‘முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களால் நன்கு அறியப்பட்டவர். நேற்றுத்தான் அரசியலிற்கு வந்தவர். அவர் விரும்பினால் கட்சியைத் தொடங்கலாம். அது அவருடைய உரிமை, ஆனால் அவருடன் நாங்கள் இணைந்து கொள்வோம் என்று எதிர்பார்த்தால் அது என்னைப்பொறுத்த மட்டிலே சிறு பிள்ளைத்தனமானது. ஏனைனில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டுடன் கூட்டமைப்பிற்குள் பயணிக்கின்றோம்.
இதே நேரத்தில் ஒரு விடயத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். கூட்டமைப்பின் ஒற்றுமையை உங்களுடைய எந்தவித செயற்பாடும் பாதிக்காத வகையில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது மக்களுடைய எதிர்பார்ப்பாகும்’’ என்று சிறிகாந்தா மேலும் கூறினார்.
#srikantha #srilanka #tamilnews #Tello
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைகுழு கூட்டம் நேற்றுக் காலை 10.30 மணிக்கு வவுனியாவில் உள்ள அதன் காரியாலத்தில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது.
கடந்த சில நாள்களாக இணைப்பாட்சி பற்றி வெளிப்பட்டுவரும் கருத்துக்கள் தொடர்பாக கட்சியின் உயர்மட்டக் குழு நேற்றுக் கூடி ஆராய்ந்தது. அதன் பின்னர் 12 மணியளவில் தனியார்விடுதி ஒன்றில் ஊடகச் சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. அங்கு சிறிகாந்தா தெரிவித்ததாவது:
கூட்மைப்பு பங்கெடுத்த அனைத்துத் தேர்தல்களிலும் இனப்பிரச்சினையை இணைப்பாட்சி என்றுஅழைக்கபடும் சமஸ்டிமுறையின் கீழ்தீர்க்க வேண்டும்; தீர்கப்படமுடியும் என்பதனை தொடர்ந்துவலியுறுத்தி வந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சுமந்திரன் உரையாற்றினார் என்று தெரிவித்துஊடகங்களில் வந்திருக்கின்ற செய்தி தொடர்பாகப் பல கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன
தமிழ்தேசியஇனத்திற்கு அதனுடைய மரபு வழித் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசத்தை ஒரு தனி நாடாக மாற்றிடவேண்டும் என்ற அரசியில் இலக்கோடு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த எமது தமிழீழ விடுதலை இயக்கம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தபோதும் அதனை இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக ஏற்றுக்கொண்டதில்லை.
அதனால் கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தத்தைக்கூட நாம் ஒரு தொடக்கப் புள்ளியாகவே கருதிவந்திருக்கிறோம். 13ஆம் திருத்தம் இன்பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்பதனை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மொழி வழி மாநிலமாக முழுமையான சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட மாநிலமாக இணைப்பாட்சிமுறையின் கீழ் நிறுவப்பட்டு இலங்கை ஒருநாடு என்ற வரையறைக்குள்ளே அரசியல் தீர்வு ஒன்றினைக் காணவேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.
அந்தத் தீர்வைகாண முடியுமா என்று பல்வேறுசந்தர்பங்களில் கேள்விக்குட்பட்டாலும் அந்தநம்பிக்கையை நாம் இன்னும்முற்றுமுழுதாக இழந்துவிடவில்லை.
இந்த முயற்சியானது தொடர்ந்துகாலத்தை இழுத்தடிக்கும்படியாக இல்லாமல் விரைவாக இந்த வருட இறுதிக்குள்ளே நிறைவேற்றபடவேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கிறது.
இந்தப் பின்னணியிலே இணைப்பாட்சியை கூட்டமைப்பு கைவிட்டுள்ளது, அதன் பங்காளியான டெலோ அதிலிருந்து விலகிவிட்டது என்கின்ற எந்த ஒரு குற்றசாட்டுக்கும் இடமிருக்காது என்பதை நாம் அழுத்தம்திருத்தமாக கூறிவைக்கவிரும்புகின்றோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு இணைப்பாட்சிமுறையில் வழங்கப்படாவிடில் எமதுமக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணயஉரிமையை முன்நிறுத்தி தேசியஇனம் என்றமுறையிலே எமது பிரச்சினையை பன்னாட்டரங்கின் முன் நிறுத்தி எமது தலைவிதியை நாங்களே தீர்மானிக்கும் வாய்ப்புதரப்படவேண்டும் என்று கோருவதற்கு எமதுகட்சி பின்னிற்கமாட்டாது.
எமது பொறுமைசோதிக்கபட்டுக்கொண்டிருக்கிறது.இலங்கை சிங்கள பௌத்த நாடென்ற மனநிலையி ல்இருந்து சிங்களத் தலைமை தன்னைமுற்றாக விடுவித்துக் கொள்ளவில்லை.
யார் என்ன விமர்சித்தாலும் இனப் பிரச்சினைக்கு இணைப்பாட்சிதான் தீர்வு என்கிற நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு மாறப்போவதில்லை.
இணைப்பாட்சி தொடர்பாக காலியிலே சுமந்திரன் பேசிய விடயம் தொடர்பாக எமது இயக்கத்தின் தலைவர் அடைக்கலநாதன், புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலாக சுமந்திரன் தெரிவித்தகருத்துக்களை நாம் முற்றுமுழுதாக அடியோடு நிராகரிக்கின்றோம். அத்துடன் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
சுமந்திரன் பல விளக்கங்களைச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் கூட நாம்தெளிவாகசொல்லவிரும்புகிறோம், ஆடைக்லநாதனோ சித்தார்தனோ இன்று நேற்றுஅரசியலுக்கு வந்தவர்கள் அல்லர்.
நீண்ட காலமாகப் பயணித்துகொண்டிருப்பவர்கள் அவர்கள் சிறு வயதிலே ஆயுதப் போராட்டத்திற்கு தம்மைஅர்பணித்வர்கள் இத்தகைய தலைவர்களுக்கு இணைப்பாட்சி பற்றிய அறிவு இல்லை என்று எவராவது சொன்னால் அந்தக் கருத்து முழுக்கமுழுக்க அபத்தமான கருத்தாகவே இருக்கமுடியும்.
இப்போது கூட்டமைப்பை விமர்சிக்கும் கஜேந்திரகுமார் ஒன்றை மறந்துவிட்டார். அவருடைய தமிழ்காங்கிரஸ் கட்சி அவரதுபாட்டனாரால் வழிநடத்தப்பட்ட காலத்தில் இணைப்பாட்சிக்கு எதிராக எத்தகைய பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டார் என்பது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு அது புரியும். சமஸ்டிக்கு எதிராகப் பித்தலாட்டக் கதைகளைக் கூறி பொய்ப் பரப்புரை செய்த பெரிய பொன்னம்பலத்தின் இன்றய அரசியல் வாரிசு இன்று இணைப்பாட்சிக் கோரிக்கையைக் கையிலேவைத்துக்கொண்டு எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்.
அவருக்கு ஒன்று கூறிக்கொள்ளவிரும்புகிறேன் எமதுஉறுப்பினர்கள் மாடிவீடுகளில்இருந்தும், கூடகோபுரங்களில் இருந்தும் அரசியலுக்கு வந்தவர்கள் அல்லர். போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது சீமைகளிலே படித்துக்கொண்டு வேறுவிடயங்களில் ஈடுபட்டவர்களும் அல்லர்.
ஒற்றையாட்சி தத்துவத்தை ஏற்றுகொண்டமையினாலேயே குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை ரெலோ வகிப்பதாக கயேந்திரகுமார் கூறினார். அவரை பார்த்து நான் கேட்கிறேன், நீங்களும் நாடாளுமன்றத்தில் இரண்டு தடவைகள் பதவி வகித்தீர்களே, நீங்களும் ஒற்றையாட்சியை ஏற்றுகொண்டுதானா பதவியை வகித்தீர்கள்? இந்தக் கேள்வி அவருக்குப் புரியும் என்று நினைக்கின்றேன். சிறுபிள்ளைத் தனமான கேள்விகளைச் சட்டம் படித்த கயேந்திரகுமார் எழுப்பக்கூடாது – என்றார்.
‘‘முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களால் நன்கு அறியப்பட்டவர். நேற்றுத்தான் அரசியலிற்கு வந்தவர். அவர் விரும்பினால் கட்சியைத் தொடங்கலாம். அது அவருடைய உரிமை, ஆனால் அவருடன் நாங்கள் இணைந்து கொள்வோம் என்று எதிர்பார்த்தால் அது என்னைப்பொறுத்த மட்டிலே சிறு பிள்ளைத்தனமானது. ஏனைனில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டுடன் கூட்டமைப்பிற்குள் பயணிக்கின்றோம்.
இதே நேரத்தில் ஒரு விடயத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். கூட்டமைப்பின் ஒற்றுமையை உங்களுடைய எந்தவித செயற்பாடும் பாதிக்காத வகையில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது மக்களுடைய எதிர்பார்ப்பாகும்’’ என்று சிறிகாந்தா மேலும் கூறினார்.
#srikantha #srilanka #tamilnews #Tello
கருத்துகள் இல்லை