இலங்கைக்கு கனடா போன்ற அரசமைப்பே அவசியமானது!
இலங்கையின் புதிய அரசமைப்பு கனடா போன்ற நாடு களில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலை வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
இலங்கைக்காக கனேடியத் தூதுவர் நேற்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அந்தச் சந்திப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது-,
பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறைமைகளின் அடைப்படையில் இலங்கையின் புதிய அரசமைப்பு அமைய வேண்டியதன் அவசியத்தையுப் கனடா உனரும் என நப்புகின்றோம்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கனேடிய அரசு ஐ.நாவில் எமது மக்களுக்கு வழங்கும் ஒத்துழைப்பு உட்பட இங்கே மேற்கொள்ளும் பணிகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
இங்கே கருத்துரைத்த கனேடியத் தூதுவர் ஐ.நா. தொடர்பில் கனடா எடுக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அதே நேரம் ஐ.நாவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம்.- என்றார்.
இவற்றைச் செவிமடுத்த கனேடியத் தூதுவர், அரசமைப்புத் தொடர்பான நகர்வுகளை அவதானித்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இலங்கைக்காக கனேடியத் தூதுவர் நேற்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புக் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. அந்தச் சந்திப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது-,
பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறைமைகளின் அடைப்படையில் இலங்கையின் புதிய அரசமைப்பு அமைய வேண்டியதன் அவசியத்தையுப் கனடா உனரும் என நப்புகின்றோம்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கனேடிய அரசு ஐ.நாவில் எமது மக்களுக்கு வழங்கும் ஒத்துழைப்பு உட்பட இங்கே மேற்கொள்ளும் பணிகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
இங்கே கருத்துரைத்த கனேடியத் தூதுவர் ஐ.நா. தொடர்பில் கனடா எடுக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அதே நேரம் ஐ.நாவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம்.- என்றார்.
இவற்றைச் செவிமடுத்த கனேடியத் தூதுவர், அரசமைப்புத் தொடர்பான நகர்வுகளை அவதானித்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை