கைதிகள் விடுதலைக்காக – பாதீட்டை கூட்டமைப்பு எதிர்க்கும் வாய்ப்பு!
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் நாளை மறுதினம் புதன்கிழமை, அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பில் நடக்கும் பேச்சு வெற்றிபெறாவிட்டால், வரவு -– செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு எதிர்க்கும் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு நடப்பதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையின் கீழ், பருத்தித்துறை பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட மக்களுக்கு நேற்று நடத்தப்பட்டது.
பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நேற்றுமுன்தினம் நேரில் சென்று சந்தித்திருந்தார்.
தங்கள் விடுதலை தொடர்பில் அரச தலைவருடன் பேச்சு நடத்தி அதில் சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால், கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அதனை ஏற்றுக் கொண்டதையடுத்து தங்கள் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நேற்று மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அந்த நிகழ்வில் மேலும் தெரிவித்ததாவது,
வரவு – செலவுத் திட்டத்தில் எமக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற அடிப்படையில் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சு அரசிடமிருந்து சரியாகத் திட்டமிட்டு அதிக நிதியைப் பெற்றுக் கொள்ளவில்லை. காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மக்கள் மீள்குடியமர்வுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும். அதற்குப் பதிலாக மாற்றுச் சட்டம் தேவையில்லை. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். அவர்களில் தண்டனை வழங்கப்பட்டவர்கள், வழக்கு நடந்து கொண்டிருப்பவர்கள் என்று எந்தப் பேதமும் இல்லாமல் விடுவிக்கப்படவேண்டும். அரசுக்கு ஏற்கனவே இந்த விடயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கின்றோம்.
அரச தலைவர் மைத்திரிபாலவுடன் நாளை மறுதினம் புதன்கிழமை பேச்சு நடத்தவுள்ளோம். அதற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்களும் பங்குபற்றவுள்ளோம். இதன்போது அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்க வலியுறுத்துவோம்.
அரசுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதை, அரசியல் கைதிகள் பிரச்சினையை மாத்திரம் வைத்துத் தீர்மானிக்க முடியாது. காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்துதான் நாம் முடிவு எடுக்க முடியும்.
நாம் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கப் போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியும் நிகழலாம். இந்த ஆண்டுக்கு இடையில் எமது பிரச்சினைகள் தீர்க்கபட வேண்டும் – என்றார்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையின் கீழ், பருத்தித்துறை பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட மக்களுக்கு நேற்று நடத்தப்பட்டது.
பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நேற்றுமுன்தினம் நேரில் சென்று சந்தித்திருந்தார்.
தங்கள் விடுதலை தொடர்பில் அரச தலைவருடன் பேச்சு நடத்தி அதில் சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால், கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அதனை ஏற்றுக் கொண்டதையடுத்து தங்கள் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நேற்று மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அந்த நிகழ்வில் மேலும் தெரிவித்ததாவது,
வரவு – செலவுத் திட்டத்தில் எமக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற அடிப்படையில் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். மீள்குடியேற்ற அமைச்சு அரசிடமிருந்து சரியாகத் திட்டமிட்டு அதிக நிதியைப் பெற்றுக் கொள்ளவில்லை. காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மக்கள் மீள்குடியமர்வுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும். அதற்குப் பதிலாக மாற்றுச் சட்டம் தேவையில்லை. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். அவர்களில் தண்டனை வழங்கப்பட்டவர்கள், வழக்கு நடந்து கொண்டிருப்பவர்கள் என்று எந்தப் பேதமும் இல்லாமல் விடுவிக்கப்படவேண்டும். அரசுக்கு ஏற்கனவே இந்த விடயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்திருக்கின்றோம்.
அரச தலைவர் மைத்திரிபாலவுடன் நாளை மறுதினம் புதன்கிழமை பேச்சு நடத்தவுள்ளோம். அதற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்களும் பங்குபற்றவுள்ளோம். இதன்போது அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்க வலியுறுத்துவோம்.
அரசுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதை, அரசியல் கைதிகள் பிரச்சினையை மாத்திரம் வைத்துத் தீர்மானிக்க முடியாது. காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்துதான் நாம் முடிவு எடுக்க முடியும்.
நாம் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கப் போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியும் நிகழலாம். இந்த ஆண்டுக்கு இடையில் எமது பிரச்சினைகள் தீர்க்கபட வேண்டும் – என்றார்.
கருத்துகள் இல்லை