விஜயகலா வெளிநாட்டு தடையுடன் பிணையில் விடுதலை!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
style="background-color: white; color: #5e5e5e; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; outline: 0px; transition: all 0.3s ease 0s;" />
குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது 5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது,

விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச நிகழ்வில் கருத்து வெளியிட்டமை தொடர்பாக அவர் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் பின்னரே கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட விஜயகலா, 5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.