எங்கள் தமிழ்த் தலைவர்கள் மேடைப் பேச்சு சரி மக்களுக்கு அல்ல!
சிங்கள மக்கள் தமது இனத்தைக் காப்பதற்காக திட்டங்களை வகுத்துச் செயற்பட்ட போது எமது அரசியல் தலைவர்கள் மேடைப் பேச்சாளர்களாக மேடைகளில் வீர முழக்கங்களை முழங்கிவிட்டு வீட்டுக்குச் சென்று நித்திரையில் ஆழ்ந்தது தான் எமது சரித்திரம். சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறியாத அப்பாவிகளாக இருந்தார்கள்.
இன்றும் இருந்து வருகின்றார்கள். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும், சூழல் அரசியலும் நில அபகரிப்பும் போரின் பச்சை முகம் என்ற தொனிப் பொருளிலான உரை அரங்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நேற்று மாலை இடம்பெற்றது. இங்கு முதன்மை விருந்தினர் உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிங்கள அரசியல் தலைமைகள் வடகிழக்கைத் தம்வசம்படுத்தும் பல திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள். அதே சந்தர்ப்பத்தில் இதற்குச் சமாந்தரமாக சந்தடி எதுவுமின்றி அந்த அரசியல் முன்னெடுப்புக்களை நிறைவேற்றுகின்ற குழுக்களாக வேறு குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
உதாரணமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரச தலைவராக வீற்றிருந்த காலத்தில் உள்நாட்டுப் போர் வலுப்பெற்று எல்லைப்புறக் கிராமங்களில் இனங்களுக்கிடையே போர் நடைபெற்ற காலத்தில் ஜே.ஆரின் மகனானரவி ஜெயவர்த்தன இந்த நிறைவேற்றுக் குழுவொன்றிற்குத் தலைமை தாங்கினார்.
வவுனியாவிற்கு அப்பால் உள்ள பம்பைமடு, ஈரற்பெரிய குளம் போன்ற பகுதிகளில் தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றியது மட்டுமன்றி அவர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி மற்றும் இன்னோரன்ன இராணுவப் பயிற்சிகளை வழங்கி அவர்களை அங்கு குடியேற்றினார்.
ரவி ஜெயவர்த்தன அரசியல் மேடைகளில் காட்சியளிக்காத போதும் இந்த நிறைவேற்று கடமைகளை திறம்பட ஆற்றினார். எனக்கு மூத்தவராக என் கல்லூரியில் கற்ற அவர் ‘ரைஃபிள் க்ளப்’ என்ற எமது சங்கம் ஒன்றில் சேர்ந்து சூட்டுப் பயிற்சி பெற்று மாணவனாக இருந்த காலத்தில் துப்பாக்கி சுடுவதில் பத்துக்குப் பத்து என்ற கணக்கில் இலக்குகளை சுட்டு வீழ்த்தக் கூடியவராக இருந்தார் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசுகளினால் முன்னெடுக்கப்பட்டுவந்த இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்புப் பற்றி உலக நாடுகள் பலவும் அறிந்திருக்கின்றன.
ஆனால் தற்போது எதுவித ஆரவாரங்களுமின்றி துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, குருதி சிந்தாமல், பச்சைப் போர் என்ற பெயரால் எமது தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு சூழல் அரசியல் என்ற மாயைச் சொல்லை பயன்படுத்தி உலக நாடுகளை நம்பச் செய்கின்ற கனகச்சிதமான செயற்பாடுகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன – என்றார்.
இன்றும் இருந்து வருகின்றார்கள். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும், சூழல் அரசியலும் நில அபகரிப்பும் போரின் பச்சை முகம் என்ற தொனிப் பொருளிலான உரை அரங்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நேற்று மாலை இடம்பெற்றது. இங்கு முதன்மை விருந்தினர் உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிங்கள அரசியல் தலைமைகள் வடகிழக்கைத் தம்வசம்படுத்தும் பல திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள். அதே சந்தர்ப்பத்தில் இதற்குச் சமாந்தரமாக சந்தடி எதுவுமின்றி அந்த அரசியல் முன்னெடுப்புக்களை நிறைவேற்றுகின்ற குழுக்களாக வேறு குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
உதாரணமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரச தலைவராக வீற்றிருந்த காலத்தில் உள்நாட்டுப் போர் வலுப்பெற்று எல்லைப்புறக் கிராமங்களில் இனங்களுக்கிடையே போர் நடைபெற்ற காலத்தில் ஜே.ஆரின் மகனானரவி ஜெயவர்த்தன இந்த நிறைவேற்றுக் குழுவொன்றிற்குத் தலைமை தாங்கினார்.
வவுனியாவிற்கு அப்பால் உள்ள பம்பைமடு, ஈரற்பெரிய குளம் போன்ற பகுதிகளில் தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றியது மட்டுமன்றி அவர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி மற்றும் இன்னோரன்ன இராணுவப் பயிற்சிகளை வழங்கி அவர்களை அங்கு குடியேற்றினார்.
ரவி ஜெயவர்த்தன அரசியல் மேடைகளில் காட்சியளிக்காத போதும் இந்த நிறைவேற்று கடமைகளை திறம்பட ஆற்றினார். எனக்கு மூத்தவராக என் கல்லூரியில் கற்ற அவர் ‘ரைஃபிள் க்ளப்’ என்ற எமது சங்கம் ஒன்றில் சேர்ந்து சூட்டுப் பயிற்சி பெற்று மாணவனாக இருந்த காலத்தில் துப்பாக்கி சுடுவதில் பத்துக்குப் பத்து என்ற கணக்கில் இலக்குகளை சுட்டு வீழ்த்தக் கூடியவராக இருந்தார் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசுகளினால் முன்னெடுக்கப்பட்டுவந்த இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்புப் பற்றி உலக நாடுகள் பலவும் அறிந்திருக்கின்றன.
ஆனால் தற்போது எதுவித ஆரவாரங்களுமின்றி துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, குருதி சிந்தாமல், பச்சைப் போர் என்ற பெயரால் எமது தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு சூழல் அரசியல் என்ற மாயைச் சொல்லை பயன்படுத்தி உலக நாடுகளை நம்பச் செய்கின்ற கனகச்சிதமான செயற்பாடுகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன – என்றார்.
கருத்துகள் இல்லை