அவரவர் மார்க்கம் அவரவர் மனதில்..!
பிறரின் நம்பிக்கைகளை ,எதிர்த்தும் ,
பிதற்றிப் பரிகசிப்பதும், ஒருவகை மனநோயே!
பிறப்பில் உண்டான பிழையாலேயே ,இந்த
பித்து பிடித்து ,மனிதனை பீடித்து வருகிறது ..
பிற-மதத்தவன் வழிபாட்டினால் , உனக்கென்ன,
பின்னடைவு வந்துவிடப் போகிறது ,சொல் .
பிறந்தாய் , வளர்ந்தாய் , நீ முன்னேறிச் செல்.
பிற்போக்காய் நடைப்போட்டு செல்லாதே!
பின்னடைவு வந்துவிடப் போகிறது ,சொல் .
பிறந்தாய் , வளர்ந்தாய் , நீ முன்னேறிச் செல்.
பிற்போக்காய் நடைப்போட்டு செல்லாதே!
பிறர் ,யாரை பின்பற்றினால் உனக்கென்ன,
பிரச்சனை பிறந்துவிடப்போகிறது ?சொல் .
பிறையை வழிபட்டால் உனக்கென்ன ?
பிறைசூடியவனை வழிபட்டால் உனக்கென்ன?
பிரச்சனை பிறந்துவிடப்போகிறது ?சொல் .
பிறையை வழிபட்டால் உனக்கென்ன ?
பிறைசூடியவனை வழிபட்டால் உனக்கென்ன?
பிற-லோகத்தில் இருக்கும் எல்லாம் வல்ல
பிதாவை வழிபட்டால் தான் உனக்கென்ன? ,
பிறர் வழிபாடு ஒருபோதும் மற்றவருக்கு
பிறழ்வைத் தந்துவிடப் போவதில்லையே!!
பிதாவை வழிபட்டால் தான் உனக்கென்ன? ,
பிறர் வழிபாடு ஒருபோதும் மற்றவருக்கு
பிறழ்வைத் தந்துவிடப் போவதில்லையே!!
மத நேசன்
கருத்துகள் இல்லை