றிஷாட் பதியுதீனையும் கொலை செய்ய சதியாம்??

அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தீவிர விசாரணைகளை நடாத்தி உண்மைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த கோரிக்கையினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொலிஸ் மா அதிபரிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இஸ்மாயில், சிரேஸ்ட சட்டத்தரணி ருஸ்டி ஹபீப் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் ஆகியோர் இன்று காலை, பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று, இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

இந்த சதியை வெளிப்படுத்திய நாமல் குமார, மற்றும் இந்த சதியுடன் தொடர்பு பட்டார்கள் என கூறப்படும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா, பிரான்சில் வசிக்கும் துஸார பீரிஸ் ஆகியோரிடமும் உரிய விசாரணைகளை நடத்தி, இந்தச் சதியின் பின்னணி பற்றியும், உண்மைத் தன்மையை பற்றியும் வெளிக் கொண்டுவருமாறும் முறைபாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அது மாத்திரமின்றி அமைச்சர் ரிஸாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.