பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ் மக்கள் பேரவையில் கூட்டம்!

தமிழ் மக்கள் பேரவையின் மிக முக்கியமான கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாணசபையின் ஆட்சி இன்றுடன் நி றைவடையும் நிலையில் வடமாகாண முத லமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக எதிர்பார்ப்புக்கள் வலுத்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தனது அரசியல் பயணம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.