வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் தீ விபத்து!
யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு சிவகுரு கடைக்கு அருகில் பயணித்துக் கொன்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த விபத்தானது இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டி ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் பயணித்துக் கொன்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி கீழிறங்கி ஏனையவர்களின் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டபோதும் அது முற்றாக எரிந்துள்ளது.
#jaffna #auto #tamilnews #news #srilanka #tamil # faire
கருத்துகள் இல்லை