மஹிந்த பிரதமர் ஆன ஆசியை யாரிடம் பெற்றார்??
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இல்லத்தில் வைத்து அவர் ஆசியை பெற்றுக்கொண்டுள்ளார் என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ எல் பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அருந்திக்க பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
கருத்துகள் இல்லை