கலவரங்களைக் கட்டுப்படுத்த இராணுவம் உதவி !
தற்போதைய சூழ்நிலை யில் நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் நடவடிக்கை எடுப்பார்கள். அவர்களால் அந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இராணுவத்தின் உதவியைக் கோரினால் மாத்திரமே இராணுவம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறு இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மாற்றம் அரசியல்வாதிகளுக்கிடையேயான அரசியல் மாற்றமாகும். ஆகையினால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல. இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு.
தற்போதைய சூழ்நிலை யில் நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு படையினரும் நடவடிக்கை எடுப்பார்கள். அவர்களால் அந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இராணுவத்தின் உதவியை கோரினால் மாத்திரமே இலங்கை இராணுவம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.
அவசர நிலைமை ஏற்பட்டால் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு ஆகக் குறைந்த அதிகாரத்தை இராணுவத்தினர் பயன்படுத்த வேண்டும். அதற்குரிய உபகரணங்களை படையினர் தம் வசம் வைத்திருக்க வேண்டும் – என்றுள்ளது.
இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மாற்றம் அரசியல்வாதிகளுக்கிடையேயான அரசியல் மாற்றமாகும். ஆகையினால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல. இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு.
தற்போதைய சூழ்நிலை யில் நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு படையினரும் நடவடிக்கை எடுப்பார்கள். அவர்களால் அந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இராணுவத்தின் உதவியை கோரினால் மாத்திரமே இலங்கை இராணுவம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.
அவசர நிலைமை ஏற்பட்டால் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு ஆகக் குறைந்த அதிகாரத்தை இராணுவத்தினர் பயன்படுத்த வேண்டும். அதற்குரிய உபகரணங்களை படையினர் தம் வசம் வைத்திருக்க வேண்டும் – என்றுள்ளது.
கருத்துகள் இல்லை