வவுனியா மாணவி அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடம்!

வெளியாகியுள்ள புலமை பரிசில் முடிவுகளின் படி வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாலகுமார் ஹரித்திக்ஹன் சுஜா என்ற மாணவி 197 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை சாரதியாக பணிபுரிந்து வருவதுடன், அந்த மாணவி கல்வி கற்ற சிவபுரம் அ.தக. பாடசாலை கஸ்ட பிரதேச பாடசாலையாக காணப்படுகின்றது.
பின்தங்கிய கிராமத்தில் இருந்து கல்விகற்று தமது மாணவி சாதனைபடைத்திருப்பது பாடசாலைக்கு மட்டுமல்லாமல் மாவட்டத்திற்கே பெருமை சேர்ந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் பீற்றர் ஜெரா தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் 9 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோன்றியதுடன் இருவர் சித்திபெற்றுள்ளனர். ஹரித்திக் ஹென்சுஜா, செல்வகுமார் டிலானி ஆகிய மாணவிகளே சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பாடசாலையின் ஆசிரியரான முத்துகுமார் லோகேஸ்வரியின் முயற்சி காரணமாகவே தமது மகள் சித்தி பெறமுடிந்ததாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.