ஒலுவில் துறைமுகம் முன்பாக ஒரே நேரத்தில் இரு வேறு ஆா்ப்பாட்டங்கள்

ஒலுவில் துறைமுகம் மீனவர்கள் முன்பாக இரு வேறுபட்ட பாரிய எதிர்ப்பு ஆா்ப்பாட்டங்கள் இன்று சனிக்கிழமை( காலை மேற்கொள்ளப்பட்டன.
ஒலுவில் துறைமுகம் படகு நுளைவாயிலில் மூடியுள்ள மணலை அகற்றக்கோரி  மீனவர்கள்  துறைமுக  நுளைவாயில் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட அதேவேளை ஒலுவில் பொதுமக்கள் கடலரிப்புக்கு நிரந்தர தீா்வை வழங்கியதன் பின்னரே மணலை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மற்றுமொரு ஆா்ப்பாட்டை நடத்தினர்.
அம்பாறை மாவட்ட அனைத்து மீனவர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மீனவத் தொழிலார்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசே எமது வாழ்வாதாரத்திற்கு வழிவிடு, அரசே மண்ணை அகற்றி ஒலுவில் வர்த்தக, மீனவ துறைமுகத்தை திறந்து விடு, ஒலுவில் துறைமுகத்தினுள் நிறம்பி இருக்கும் மண்ணை அப்புறப்படுத்தி மீனவர்களின் வாழ்விற்கு வழி விடு, துறைமுக நிர்மானத்தின் போது நஷ்டயீடு பெற்ற ஒலுவில் மக்கள் இதனை தடுப்பதேன், அரசே எமக்காக முதலீடு செய்த 50 மில்லியன் டொலர்களை கடலில் கரைத்துவிடாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதேவேளை ஒலுவில் கடற்கரை பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்புக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திய பின்னரே குறித்த துறைமுகத்தில் மணலை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தற்போது மணலை அகற்றுவதற்கான நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்து ஒலுவில் பிரதேசமக்கள் துறைமுக பிரதான நுளைவாயில் முன்பாக மீனவர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு எதிரா மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
துறைமுக நுளைவாயில் கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டுள்ளதனால் நாம் மேற்கொண்டு வந்த கடற்தொழில் பாதிக்கப்பட்டு எமது ஆயிரக்கக்கான மீனவர்களின் ஜீவனோபாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. 
எனவே மீனவர்களினதும், அவர்களினது குடும்பங்களினதும் நலன் கருதி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றினை வழங்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை எதிர் வரும் திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு எமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஒலுவில் துறைமுகத்தில் மணல் குவிந்துள்ளதனால் கடந்த ஒரு வருடகாலமாக கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் கல்முனை, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2800 மீனவர்கள் பெரும் கஷ்டங்களையும், இன்னல்களையும் எதிர் நோக்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.