இடைக்கால அரசாங்கத்தினை அமைக்கும் எண்ணமில்லை – துமிந்த

சுதந்திர கட்சிக்கு இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான எண்ணம் இல்லை என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுதந்திர கட்சிக்கு இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான எண்ணம் இல்லை. அத்தோடு 2020 வரை தேசிய அரசாங்கமே தொடரும்.
தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற யோசனை ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முன்வைக்கப்பட்டது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.