நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 23ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் மேலதிகக் கொடுப்பனவுகளில் கணிசமான தொகை கடந்த 30 மாதங்களாக அரசாங்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசாங்கம் எமது பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை வழங்கத் தயாராக இல்லை எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக தமது பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள வீதியில் இறங்கிப்போராட தயாராக உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

#ஆசிரியர் சேவை சங்கம்  #அதிபர்  #ஆசிரியர்  #எச்சரிக்கை  #colombo  #srilanka  #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.