அம்பாரையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பன்னாட்டுச் சிறுவர் தினமான இன்று மட்டக்களப்பில் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது-,
போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அரசு எம்மீது அக்கறையற்றுள்ளது. பன்னாடுகள் நேரடியான அழுத்தத்தைக் கொடுத்து எமது பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே போராட்டம் நடத்துகின்றோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப ங்களில் உள்ள சிறுவர்கள் பல்வேறு ஏக்கங்களுடளும், கண்ணீருடனும் தமது உறவுகளை எதிர்பார்த்துள்ளனர். இந்தச் சிறுவர் தினத்திலாவது பன்னாட்டுச் சமூகம் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எமது உறவுகள் கிடைக்க வழியேற்படுத்த வேண்டும் – என்றனர்.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது-,
போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அரசு எம்மீது அக்கறையற்றுள்ளது. பன்னாடுகள் நேரடியான அழுத்தத்தைக் கொடுத்து எமது பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே போராட்டம் நடத்துகின்றோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப ங்களில் உள்ள சிறுவர்கள் பல்வேறு ஏக்கங்களுடளும், கண்ணீருடனும் தமது உறவுகளை எதிர்பார்த்துள்ளனர். இந்தச் சிறுவர் தினத்திலாவது பன்னாட்டுச் சமூகம் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எமது உறவுகள் கிடைக்க வழியேற்படுத்த வேண்டும் – என்றனர்.
கருத்துகள் இல்லை