ரவி , தயாசிறிக்கு மீண்டும் அமைச்சு பதவிகள்?

முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு மீண்டும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவி கருணாநாயக்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பிணை முறி தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து அவர் அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். ஆனபோதும் அவருக்கு மீண்டும் அமைச்சு பதவியொன்றை வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சராக பதவி வகித்த தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திலிருந்து 16 பேர் அணியுடன் வெளியேறியதை தொடர்ந்து அவரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தார். எவ்வாறாயினும் தயாசிறி மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியுடன் இணைந்து செயற்படுவதால் அவருக்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.