ரணிலிடம் எந்த திட்டமும் இல்லை-திஸாநாயக்க!

"பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்த திட்டமும் இல்லை" என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

"ரணில் விக்கிரமசிங்க நாட்டில் பிரதமராக இருந்த காலமமெல்லாம் அவரால் ஆரம்பிக்ப்பட்ட பொருளாதார திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. தற்போதுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்க எங்களால் முடியும். அதனால் அரசாங்கத்தில் இருக்கும் 23 பேரும் எங்களுடன் இணைந்துகொள்ளவேண்டும்." என மேலும் தெரிவித்தார் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.