ஹாங்காங் ஓபனிலிருந்து நாக் அவுட்டானார் ஸ்ரீகாந்த்!

ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோட்டோவிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறினார்.


இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில், ஜப்பான் வீரர் நிஷிமோட்டோவுடன் மோதினார். ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய நிஷிமோட்டோ, ஸ்ரீகாந்த் மீது முழு ஆதிக்கம் செலுத்தினார். கடுமையாக போராடிய ஸ்ரீகாந்த், நிஷிமோட்டோவின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினார். வெறும் 44 நிமிடங்களே நீடித்த இந்த போட்டியில், 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.