சம்பந்தன் ஐயாவும் மகிந்த பதவியும்.!

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றாலே தமிழர்களின் இதயத் துடிப்பாக தமிழ் மக்கள் மனங்களில் வலம் வந்த கட்சி என்றால் அது நன்கு பொருத்தமானது. விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதப் போர்மூலம் தமிழர்களுக்கான ஒரு பாதையினை வகுத்து.

தமிழ் மக்கள் அபிலாசைகளை பாராளுமன்றில் ஒருமித்த குரலாக ஒலிக்க செய்வதன் மூலம் தமிழர்களின் பிரச்சனை பெரும்பான்மை மக்களான சகோதர மொழி பேசுகின்ற சிங்கள மக்களிடத்தில் எடுத்துரைப்பதற்கு பல ஆயுதக் குளுக்களாக இயங்கிய தமிழ் அமைப்புக்களை ஒன்று திறட்டி திரு.சம்பந்தன் ஐயாவிடம் விட்டு சென்றார்கள் என்பது போர் முடிந்தபின் பலரது வாய்களால் நாம் அறிந்த விடையமாகும்.

யுத்தம் முடிவுற்றபின் தமிழர்களுக்காக தமிழ் சேசிய கூட்டமைப்பு ஒருரே கட்சிதான் தமிழர்களின் இதைய துடிப்பு என புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் தங்களின் ஏகப்பிரதி நிதிகளாக விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டார்கள். இவை தமிழ் மக்கள் விட்ட முதல் தவறாகும்?. ஏன்? எனில். தமிழர்களுக்கு கிடைக்கப் பெற இருந்த நல்ல வாப்புக்களை எல்லாம் ஐயா சம்பந்தன் அவர்களின் கீழ் சேர்ந்த அணி கட்சி உறுப்பினர்கள் ஐநா விடம் இருந்து முன்னாள் ஆச்சியாளராக இருந்த மகிந்த ஐயாவை காப்பாற்றி கரையும் சேர்த்து இன்று மீண்டும் பிரதமராக மாற்றி வழி வகுத்தமைக்கு தமிழ் மக்கழ் பிரதி நிதிகளே முதன்மை வகிக்கின்றனர். அதன் பலனே தமிழர்கள் இலங்கையில் படும் அவலநிலை என்பதே உன்மை.இவைக்கான கரணங்களை நாம் பாற்போமாயின்.

ஒன்று. பல தமிழ் தலைவர்களுக்கு பின் 1977 முதல் 1987 வரை அரசியல் பயணத்தில் பதவி வகுத்த ஐயா சம்பந்தன் அவர்கள் தற்போதைய காலம்வரை தனது அரசியல் பாதையில் எவ்வாறான பதவிகள் வகித்தவர் என்பது தமிழ் மக்கள் நன்கு அறிவார். இவ்வாறு அரசியல் பயணத்தில் இவர் தனது தமிழ் மக்களுக்காக எதனை சாதித்தார்??.அல்லது அப்பா பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வரை. தமிழர்களுக்கு ஒரு இக்கட்டான நிலை வருகின்றபோது இந்தியாவிடத்தில் தஞ்சம் அடைவதனை தவிர இந்திய அரசிடம் இருந்து எதனை தமிழ்ர்களுக்கு இந்த தமிழ் தலைமைகள் பெற்று கொடுத்து இருக்கின்றார்கள். என வரலாற்றை புரட்டி புழுதி தட்ட நினைத்தாலும் தமிழர்களை அழிப்பதனை தவிர இந்தியா எவ்வித உதவியும் தமிழர்களுக்கு இன்றுவரை செய்ய முயலவில்லை என்பதே உன்மை.

இரண்டு. இங்கே இந்தியாவினால் தமிழர்களுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ப்பட்டது ( 13 திருத்த சட்டம் ) அதில் தமிழர்களுக்கு பிரதி பலிக்கக்கூடியவை என நாம் கருதெல்லாம். ஆனால் அதனை இன்றுவரை நடைமுறை செய்ய முயட்சிக்கவில்லை. கரணம் தமிழர்களின் பலம் இழந்து பத்து வருடம். இனி தமிழர்களின் விதி தந்தை செல்வநாயகம் கூறியது போன்று கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இவை இன்று சொற்பனமாகி விட்டது. காரணம்
( 13 ) திருத் சட்டம் இனி இடம்பெறும் என்பது கிடையாது. காரணம் ( 19 ) அரசியலில் பாப்பின் பிரகாரம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு வாக்கு பலம் இருந்தால் மாத்திரம் புதிதாக ஒரு அதிகாரத்தை உருவாக்க முடியும். அதற்கு பெருன்பாமை கட்சிகள் இடம் அளிக்கப்போவதும் கிடையாது. இதனை தெளிவாக கையாண்டவர் அரசியல் காய் நகர்தலில் கில்லாடியான முன்னாள் பிரதமர் ரணில் ஐயா. தமிழர்களின் கையை பிடித்து தமிழ் மக்கள் கண் மீது குத்துவதற்கு தொளிவாக காய் நகர்த்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சம்பந்தன் ஐயா ( 19 ) அரசியல் அதிகரத்தை நிறேவேற்றி விட்டார். இன்று வரும் தீர்வு. நாளை வரும் தீர்வு என T.N.A தலைவர் தமிழர்களை ஏமாற்றியவண்ணம் தங்களின் உறுப்பினர்களுடன் காலத்தை கடத்தி இப்போது நல்லாட்சிக்கு அரசை உருவாக்கி சிறுபாண்மை மக்களின் கண்ணிருக்கும் சாபத்திற்கும் T.N.A தள்ளப்பட்டு விட்டது.

மூன்று. கடந்த காலம் இலங்கையில் நடைபெற்ற தேறுதலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதன் பலனாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களின் வாக்கு பலத்தாலும், கூட்டச்சி அரசியல் பலத்தாலும் எதிர் கட்சி பதவி சம்பந்தன் ஐயாவிடம் கொடுக்கப்பட்டது. இங்கேதான் நாங்கள் சிந்திக்கவேண்டியவர்களாக உள்ளோம். ஐநா இலங்கைக்கு நெருக்கடிகளை கொண்டு போர்க்குற்ற விசாரணை தேவை என்று கூறிக்கொண்டிருக்க சம்பந்தன் ஐயா பதவியேற்று நாங்கள் ஓற்றுமையாக இருக்கின்றோம். தற்போதைக்கு அவை அவசிம் கிடையாது. அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள். என கூறி உலக நாட்டின் வாய்களை மூடி வெண்ணை திரண்டுவர பானை உடைந்த கதைபோல் அனைத்தையும் மாற்றி தமிழர்களின் இன அழிப்பினை மூடி மறைத்த பெருமை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே சேரும். அவ் காலங்களில் சம்பந்தன் ஐயா எமக்கு பதவி முக்கியம் கிடையாது. தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும், தமிழ் மக்களின் அபிலாசைகள் தீற்கப்படவேண்டும், எமது இனப் பிரச்சனைகள் வெளிநாட்டு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும், வட.கிழக்கு மக்களின் காணிகளில் இராணுவம் அகற்றப்படவேண்டும், இதற்கு தீர்வு தாருங்கள் நாங்கள் அதன் பின் எந்த பதவி வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள தயார். அதுவரை எமது ஆதரவு இந்த அசருக்கு இருக்கும். என அன்று கூறியிருந்திருந்தால் இன்று உலகில் தமிழர் வாழும் இடம் எல்லாம் சம்பந்தன் ஐயாவின் சிலைகள் காணப்பட்டிருக்கும். அனைத்தையும் மண்ணோடு மண்ணாக்கி இன்று இந்தியாவிடம் அனுமதி கேட்டு முடிவு எடுக்கின்றோம் என கூறும் இந்த கூட்டமைப்பினர் இதனை விட வரலாற்று துரோகத்தை தமிழ் மக்கழுக்கு நிகழ்த்த இயலாது.

நான்கு. தமிழ் மக்களின் அவல நிலைகளை களையுங்கள் என உலக நாடுகளில் வாழும் புலம்பெயர் சொந்தங்கள் பலவகையான கவனஈர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு. தமிழர்களுக்காக ஒவ்வரு நாடுகளாக தங்களின் ஆதங்களை முன் வைக்க முயன்ற போதல்லாம் தடையாக இருந்து இலங்கை இனவாதிகளை காப்பாற்றும் நோக்கோடு கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கும் நோக்காகவும் அலையும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போவும் தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்று தரும் என்பது ஒரு பொய் பேச்சாகவே உள்ளது.

ஐந்து. இன்று எந்த பதவிகளும் இல்லாது நிற்கதியாக நிற்கின்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதனை செய்யபோகிறார்கள்?? மகிந்தவா?? ரணிலா??? எங்கே கோடிகள் கூட கிடைக்கபோகுது?? என வாய் விழந்து காத்திருக்கும் இவர்கள் இந்தக்காலத்தில் எடுக்கப்போகும் முடிவு என்ன??? மகிந்த கொடியவர் என தேர்தல் பிரச்சாரங்களில் முழங்கிய இவர்கள் கைகோர்ப்பார்களா??? அல்லது நல்லாட்சி அரசை உருவாக்கி தனது உயிரை பாதுகாத்தவர்கள் தமிழ் பேசும் மக்கள் என கூறய ஜனாதிபதி இன்று அவ் மக்களுக்கு செய்த துரோகத்தை மறந்து ஜனாதிபதியுடன் கைகோட்பார்களா?? அனைத்தும் கூட்டமைப்பின் நிவந்தனை இல்லாத ஆதரவுடன் நடைபெறுமாயின் வடக்கில் வருகின்ற தேர்தல் சி.வி.விக்கினேஸ்வரன் ஐயாவின் கைகளில் தமிழர்களின் பாதுகாப்பு நிலமையினை கையில் எடுங்கள் என தங்களின் வாக்கு பலத்தால் மீண்டும் முதல்வர் பதவி கையளிக்கப்படும் என்பதே உன்மை.

ஆறு. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்கள் சார்பாக தமிழர்களின் ஏக பிரதி நிதியாக பேசுகின்றபோது கட்சி உறுப்பினர்களுக்கு நிவந்தனை செய்வதாகவும் அதை மீறினால் கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் அச்சுறுத்துகின்றனர் என மக்கள் நலன் கொண்ட பலர் கூறி வருகின்றன. அதனை பாற்கின்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் திரு. வியாழந்திரன் ஐயா கடந்த காலங்களில் பேசியது நினைவில் வருகின்றது. வடக்கில் எடுக்கும் சரசியல் முடிவகளை கிழக்கில் தினிக்க வேண்டாம். இங்கு மூவின மக்கள் வாழ்கின்றார்கள். அதனை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என கூறியிருந்தார். உன்மையில் வடக்கில் வாழ்கின்ற மக்களை விட கிழக்கில் வாழ்கின்ற மக்கள் பலவகையான அழுத்தங்களில் நங்கி வாழ்கின்றார்கள். வறுமை,இனமாற்றம், நில ஆக்கிரமைப்பு, என பலவகையான போராட்டத்தின் மத்தியில் வாழும் மக்கள் மீது இதுவரை தமிழ் மக்கள் பிரதி நிதிகளால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார முன்னெடுப்பு என்ன?? உங்களால் தீர்வு எதனையும் அடைய முடியவில்லை என்றால் ஆழும் அரசுடன் இணைந்து மக்களுக்கு தேவையான அவிபிரித்திகளை முன்னெடுங்கள். அது எமது இனத்தின் இருப்பிடத்தையும், நில சுத்திகரிப்புக்களையும் தடுக்க இயலுமானதாக அமையப்பெறும்.
எது எவ்வாறாக இருந்தாலும் வேறு நாட்டின் ஆதரவுடன் தமிழ் பிதரி நிதிகள் இணைந்து ஒரு நிபந்தனை உடன்படிக்கையுடன் இலங்கை அரசியல் மற்றத்தை முன்னெடுக்குமாயின் சம்பந்தன் ஐயாவின் பயணம் வெற்றிபெறும். இல்லாவிடின். தற்போதைய அரசியல் பலத்தை வைத்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து. அதன் பின் தேர்தல் நடத்தி நேரடியாக மகிந்த ஐயா அதி கூடிய பலத்துட் நேரடியாக ஆட்சி பீடம் ஏறுவார் அப்போது அனைத்தும்?????? சம்பந்தன் ஐயா எடுக்கப்போகும் முடிவு.........?

சுட்டிக்காட்டல் தொடரும்.!
நிருபர் கோகிலதாஸ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.