"தமிழீழத் தேசிய மாவீரர்கள்"

தாயிலும் மேலான மாவீரர்களே...
தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில்
நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்?

வாயில்லாப் பூக்களது வாழ்வு மலரும் – அவர்
வாய் திறந்து பரணி பாடும் நாள் தெரியும்.
தீயொன்று உள்ளாமதில் கொழுந்து விட்டதா? – ஊரில்
தீமைகண்டு உன்னிதயம் வெம்பி அழுததா?
பாய்விரித்து உறங்கிவிட மனம் வெறுத்ததா ? – உன்னை
பாயும்புலி வீரனாகிப் போகச் சொன்னதா?
வானமதில் வெள்ளிஒன்று நின்றது கண்டாய் – தமிழர்
வாழ்வுயர வேண்டுமென வாழ்ந்தது கேட்டாய்
காகத்து வாழ்வதனை காதலித்துச் சென்றாய்
கண்துயிலாக் காவலிலே இன்பமா சேர்த்தாய் ?
ஈகையிலே வருவது பேரின்பம் என்றார் – உயிர்
ஈகமது செய்து நீயோ இன்பங் கண்டாய்
சோதரியர் கைகளிலே விலங்குகள் போட்டார் – வாழும்
சுதந்திரத்தை சிலபேய்கள் தீண்டியும் விட்டார்.
உன் குருதிச் சிவப்பாலே விடியல் தெரிந்தது – படைகள்
ஊரைவிட்டு முகாமுக்குள் ஒதுங்கிப்பதைத்தனை
நின் ஆவி கரைந்ததாலே கடல் எழுந்தது – அங்கே
நின்று முழங்கிய நேவியின் கப்பல் மறைந்தது.
தமிழீழம் ஒன்றே உன் தாகம் என்றாயே – இதைத்
தாங்கிய நெஞ்சுக்குச் சாந்தி வேண்டாமா?
தமிழர் துயரைநீ தாங்கி நடந்தாயே – நாமும
தாங்கிச் சுமத்தலன்றி வேறெது வேண்டும் கூறு:
கவியாக்கம்:- ஹேமராஜ்
(லண்டன் )
சூரியப்புதல்வர்கள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.