பேரம் பேசுவதற்கு நாமல் வீடு தேடி வந்தார்

தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் தன்னிடமும் அரசியல் ரீதியில் பேரம்
பேசப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
நாடாளுமுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது இல்லத்திற்கு வந்து, வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
ஆதவனின் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், நாமலுடனான சந்திப்பு அரசியல் ரீதியான பேரம் பேசலாகவே அமைந்ததாகவும், பணத்தை மையப்படுத்தி அவர் தன்னிடம் பேரம் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.