பிறந்தநாள் கொண்டாட முயன்ற சிவாஜிலிங்கம் கைதாகி விடுதலை

தமிழீழ தேசிய தலைவா் மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ் வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு அவாிடமிரு ந்த பொருட்கள் பறிக்கப்பட்டதன் பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.


இன்றைய தினம் தேசிய தலைவா் மேதகு வே.பிரபாகரனின் 64வது பி றந்த தினம் இன்றைய தினம் பல இடங்களில் கொண்டாடப்படுகின் றது. இந்நிலையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சி வாஜிலிங்கம் தலமையில் இன்றைய தினம் காலை, வல்வெட்டித்துறையில் உள்ள தலைவாின் வீட்டில் ஒழுங்கமைக்கப்ப ட்டிருந்த நிலையில் அங்குவந்த பொலிஸாா் சிலருடைய அடையாள அட்டைகளை பறித்துக் கொண்டு விசார ணைக்கு வருமாறு அழைத்துள்ளனா்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக  முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரபாகரனின் வீட்டுக்கு சென்றபோது சிவாஜிலிங்கமும் கைது செய்யப்பட்டாா்.  பின்னா் அவாிடமிருந்த கேக் உள்ளிட்ட பிறந்தநாள்

கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமு தல் செய்த பொலிஸாா் மேல் நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்  கொள்ளப்படும் என கூறியுள்ள பொலிஸாா் சிவாஜிலிங்கத்தை வெளியில் விட்டுள்ளனா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.