யாழில் தாயின் செயலால் 4வயது சிறுமி துஷ்பிரயோகம்!

யாழில் 4 வயதுக் குழந்தை தாயின் கள்ளக்காதலனால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளது.


அந்தக் குழந்தையின் தாய் குறித்த குழந்தை பூப்படைந்து விட்டது எனத் தெரிவித்து யாழ் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளார். குழந்தையின் அந்தரங்க உறுப்பிலிருந்து இரத்தம் வெளியேறியதை அவதானித்து குழந்தையைப் பரிசோதித்த போது குழந்தை கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறித்த குழந்தையுடன் சமார்த்தியமாக கதைத்து உண்மையை அறிந்துள்ளனர். குறித்த குழந்தையை வைத்தியசாலையில் உள்ளவர்கள் விசாரித்த போது அக் குழந்தை தெரிவித்த தகவலில் ‘தனக்கும் அம்மாவுக்கும் இடையில் பக்கத்து வீட்டு மாமா வந்து படுத்திருவார் எனவும் தனக்கும் விரலால் ஏதோ செய்வார் அதன் பிறகு தனக்கு வேற ஏதோ செய்தவர் எனவும் அதனால் தனக்கு கடுமையாக வலித்தது எனவும் கூறியுள்ளது. அத்துடன் அவர் இவ்வாறு செய்யும் போது நான் அழுதால் தனக்கு போன் வாங்கித் தருவதாக கூறுவார் என அந்த 4 வயதுக் குழந்தை கூறியுள்ளது.

தாயின் கணவன் கட்டார் நாட்டில் உழைத்து கொடுக்கும் போது தாய் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததுடன் தனது சிறு குழந்தையையும் கள்ளக்காதலனால் சீரழிக்க விட்டுள்ளாள். தாய் மற்றும் கள்ளக்காதலன் ஆகியவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை சட்டத்துறையினர் மேற்கொண்டு இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்கு முன்நிற்க வேண்டும்.

போலியான முகவரிகள், போலியான தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்தே குறித்த தாயான இவள் யாழ் போதனா வைத்தியசாலையில் தனது குழந்தையை அனுமதித்துள்ளாள்.அத்துடன் சட்டவைத்திய அதிகாரி குழந்தையைப் பரிசோதித்த பின்னர் வைத்தியசாலையை விட்டு ஓடுவதற்கும் இவள் முற்பட்டுள்ளாள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.