நான் ஜனாதிபதியை ஒருபோதும் பழி வாங்க மாட்டேன் - ரணில்

இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியுற்றால் தன்னால் ரணிலோடு தொடர்ந்து வேலை செய்ய முடியாது என சிரிசேன சொன்னவை பகிரப்பட்டிருந்தன.
அதன் அர்தத்தை விளங்கிக் கொண்ட ரணில் மனோவை அழைத்து " தான் ஒருபோதும் ஜனாதிபதியையோ அல்லது அவரது குழுவையோ பழி வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அத்தோடு தனது அரசியலானது மகாத்மா குணங்களை கொண்டதென்றும் அதற்குள் பழி வாங்கும் சிந்தனைகள் இல்லை என மனோ கணேசன் மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் படி சொல்லியுள்ளார்.
ஒரு பிழையை மறைப்பதற்காக மேலதிக தவறுகளை செய்யாது, கடந்து போனவற்றை மறந்து இணைந்து இந்த பிரச்சனைகளை சுமூகமாக்க முயல வேண்டும் என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் எப்படி முடிவுக்கு வரும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.