பேஸ்புக் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞன்

பேஸ்புக் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.
செல்போன்களை வழங்குவதாக கூறி, சந்தேக நபர் பேஸ்புக் மூலம் தொடர்புக்கொண்டு தனது வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்யுமாறு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் நீர்கொழும்பு - பெரியமுல்லை பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.