நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படலாம்-ஹர்ச டி சில்வா!

இலங்கையின் நாடாளுமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு கலைக்கப்படலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும் மைத்ரி அவ்வாறு செய்வாரேயானால் இலங்கையில் “ஜனநாயகம்” என்பது இல்லாமல் செய்யப்பட்டுவிடும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி அவ்வாறு செய்யமாட்டார் என்று நம்புகிறேன் என்றும் 19 வது திருத்தத்தின் படி 150 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அதற்குத் தேவை என்று அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஹர்ச டி சில்வா பதிவிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தரப்புக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காதநிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தினைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். எனினும் மகிந்த தரப்புக்கு போதிய நாடாளுமன்றபலம் இல்லாத காரணத்தினால் நாடாளுமன்றையும் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

எப்படியும் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தினைப் பெற்றுவிடலாம் என்று எண்ணிய மைத்திரி – மகிந்த கூட்டணிக்கு அது கைகூடாத காரணத்தினால் நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படலாம் என்று ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.