கட்சி தாவினார் மனுஷ நாணயக்கார!
மகிந்த ராஜபக்ச அரசில் அண்மையில் பிரதி அமைச்சராகப் பதவியேற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாண யக்கார நேற்றுத் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளார். மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தாவியுள்ளார்.

கூட்டரசில் இருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் இணைந்து அமைத்த அரசில் மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மனுஷ கட்சி தாவியே இந்தப் பதவியைப் பெற்றுக் கொண்டார்.
நேற்று அவர் திடீரெனத் தனது பதவியில் இருந்து விலகுகின்றேன் என்று அரச தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அலரி மாளிகை சென்ற அவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
பதவிப் பிரமாணம் செய்துகொண்ட புதிய அரசை நாடுகள் எவையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனது ஜனநாயக – அரசியல் நம்பிக்கைகள் மற்றும் மனச் சாட்சியின் அடிப்படையில் எனது பதவி விலகலைச் சமர்ப்பிக்கின்றேன் என்று மனுஷ அரச தலைவருக்கு அனுப்பிய பதவி விலகல் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் உங்களுக்குக் கிடைத்த ஆணையையும், அதன்பின்னர் கூட்டு அரசு உருவாக்கப்பட்டதும் அதிகார வரமுறை மீறல்களையும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கே என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இன்று முதல் நான் சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்று தலைமை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவையே ஏற்பேன் என்றும் அவர் அரச தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை நீங்கள் தலைமை அமைச்சராக நியமித்து நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து கடந்த சில நாள்கள் குழப்பம் மிக்கவையாகக் காணப்படுகின்றன.
நான் உங்களுடன் பேச்சு நடத்தினேன். நீங்கள் கூறியவற்றை ஏற்றுக் கொண்டு புதிய அரசில் பிரதி அமைச்சராகப் பணியாற்றும் அரசியல் முடிவை எடுத்தேன் என்றும் மனுஷ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உங்களின் நடவடிக்கையால் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகளைத் தெளிவுபடுத்தி சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையை வாசிக்க நேர்ந்தது. பதவிப் பிரமாணம் செய்து கொண்ட புதிய அரசை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இது எனது ஜனநாயக மனச்சாட்சியை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. நான் எனது அரசியல் சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையை மேற்கொண்டேன்.
அரசமைப்புக்கு முரணான நடவடிக்கைகளுக்குத் துணை போகக் கூடாது என்று முடிவுக்கு வந்துள்ளேன் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net

கூட்டரசில் இருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் இணைந்து அமைத்த அரசில் மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மனுஷ கட்சி தாவியே இந்தப் பதவியைப் பெற்றுக் கொண்டார்.
நேற்று அவர் திடீரெனத் தனது பதவியில் இருந்து விலகுகின்றேன் என்று அரச தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அலரி மாளிகை சென்ற அவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
பதவிப் பிரமாணம் செய்துகொண்ட புதிய அரசை நாடுகள் எவையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனது ஜனநாயக – அரசியல் நம்பிக்கைகள் மற்றும் மனச் சாட்சியின் அடிப்படையில் எனது பதவி விலகலைச் சமர்ப்பிக்கின்றேன் என்று மனுஷ அரச தலைவருக்கு அனுப்பிய பதவி விலகல் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் உங்களுக்குக் கிடைத்த ஆணையையும், அதன்பின்னர் கூட்டு அரசு உருவாக்கப்பட்டதும் அதிகார வரமுறை மீறல்களையும், ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கே என்பதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இன்று முதல் நான் சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்று தலைமை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவையே ஏற்பேன் என்றும் அவர் அரச தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை நீங்கள் தலைமை அமைச்சராக நியமித்து நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து கடந்த சில நாள்கள் குழப்பம் மிக்கவையாகக் காணப்படுகின்றன.
நான் உங்களுடன் பேச்சு நடத்தினேன். நீங்கள் கூறியவற்றை ஏற்றுக் கொண்டு புதிய அரசில் பிரதி அமைச்சராகப் பணியாற்றும் அரசியல் முடிவை எடுத்தேன் என்றும் மனுஷ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உங்களின் நடவடிக்கையால் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகளைத் தெளிவுபடுத்தி சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையை வாசிக்க நேர்ந்தது. பதவிப் பிரமாணம் செய்து கொண்ட புதிய அரசை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இது எனது ஜனநாயக மனச்சாட்சியை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. நான் எனது அரசியல் சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையை மேற்கொண்டேன்.
அரசமைப்புக்கு முரணான நடவடிக்கைகளுக்குத் துணை போகக் கூடாது என்று முடிவுக்கு வந்துள்ளேன் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net
கருத்துகள் இல்லை