நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தது ஏன்?

எனக்கெதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால் தான் கடந்த நவம்பர்-14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நேற்று(25) நடத்திய சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக் கொள்வதற்கு நவம்பர்-14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் முதலாவது பந்தியை நீக்குமாறு நிபந்தனை விதித்தேன்.



அதற்குக் காரணம் அதில் ஒக்ரோபர்- 26 ஆம் திகதி பிரதமரைப் பதவி நீக்கியும், புதிய பிரதமரை நியமித்தும் ஜனாதிபதி வெளியிட்ட இரண்டு அரசிதழ் அறிவிப்புகளும் அரசியலமைப்புக்கு முரணானவை, செல்லுபடியற்றவை என்று கூறப்பட்டிருந்தது.

அந்தப் பந்தியை உள்ளடக்கிய பிரேரணையை ஏற்றுக் கொண்டால் நான் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுமக்க நேரிடும். பின்னர் அது எனக்கெதிராகவும் பயன்படுத்தப்படலாம்.

அதனை ஏற்றுக்கொண்டால் நான் அரசியலமைப்பை மீறிவிட்டதாக எதிர்காலத்தில் என் மீது குற்றவிசாரணைப் பிரேரணையைக் கொண்டு வர முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.