செல்பி மோகத்தில் அழகி விஜயகலா !

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், புதிய அரசுக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், சபைக்குள் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மும்முரமாக செல்பியில் மூழ்கியிருந்தவர் அமைச்சு பதவி பறிக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரன்.

குறிப்பாக ஓடியோடி தனது கட்சி பிரமுகர்களுடன் அவர் செல்பியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

வாக்கெடுப்பை தடுப்பதற்காக மைத்திரி, மஹிந்த கூட்டணி, சபாபீடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலும், தனது நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக நின்றார் சபாநாயகர்.

கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் குரல்பதிவு வாக்கெடுப்பை நடத்தினார். இதனால், தோல்வியுடன் திரும்பவேண்டிய நிலை மஹிந்தவின் சகாக்களுக்கு ஏற்பட்டது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Parliment #Vigijakala #UNP #Selfe #Phone

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.