வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வீடு !

தென்னிலங்கையில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பலராலும் அதிக பாராட்டை பெற்றுள்ளது.
பிரதீப் என்ற இளைஞரும் அவரது மனைவியும் இணைந்து வறுமையில்
பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளனர்.
குறித்த இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
எனினும் திருமணத்தை மிகவும் எளிமையாக இருவரும் செய்துள்ளனர். திருமணத்திற்கு வந்தவர்கள் இந்த தம்பதியினர் கஞ்சத்தனமிக்கவர்கள் என கூறியுள்ளனர்.
எனினும் அவர்கள் திருமணத்திற்கான அனைத்து செலுவுகளையும் குறைந்த அந்த பணத்தில் இந்த வீட்டை நிர்மாணித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இன்றைய தினம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த மனிதாபிமானமிக்க செயற்பாடு பலரையும் வியப்படைய வைத்துள்ளதுடன், ஆடம்பரங்களை விரும்புவோருக்கு இதுவொரு சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.