இலங்கையில் அரசியல் சிக்கலை தீர்க்க உடன் நடவடிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலை தீர்த்துக் கொள்ள தலைவர்கள்
உடனடியாக நடவடிக்கை​களை ​மேற்கொள்ள வேண்டுமென, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையில் உள்ள நட்புறவானது எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரூபாயின் வீழ்ச்சியால் வர்த்தகத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்களென்றும் இது மிகவும் பாரதூரமான நிலை என்றும் அலைனா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.