முல்லைத்தீவில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நாயாற்று பகுதி மீனவர்கள் இரண்டு மாதங்களாக கடற்றொழிலுக்கு செல்லவில்லையென குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள அப்பகுதி மீனவர்கள் தற்பொழுது ஆபத்தான நிலையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாயாற்று பெருங்கடற்பகுதி கடற்கரையில் இருந்து 10 மீற்றர் தூரத்தில் சுமார் 20 அடி ஆழமாக அதிகரிக்கின்றது. இதன்படி 100 மீற்றர் தூரத்திற்கு 200 அடி கடல் ஆழம் கொண்ட கடற்பகுதி இதுவென குறிப்பிடப்படுகின்றது.
மிக ஆழமான இக்கடற்பகுதி தற்பொழுது சீரற்ற நிலையில் காணப்பட்டாலும் தமது வறுமையை போக்க ஆபத்தான இக்கடற்றொழிலை மேற்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.