ரணில் இன்றே பிரதமராக பதவியேற்பார்: ஹக்கீம்

ரணில் விக்ரமசிங்க இன்றைய தினமே பிரதமராக பதவி ஏற்பார் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்த அவர், இதன்போது ரணிலை பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, ரணிலை பிரதமராக நியமிக்கப்  போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்து வருகின்றமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த ஹக்கீம், ரணிலை பிரதமராக நியமிப்பது மாத்திரமே ஒரே தீர்வு எனத் தொிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.