சுபர்த்தனா படைப்பகத்தின் புதிய வெளியீடு *உசிரிலே*!

பாடலுக்கு இசை நவீனம் ஸ்ரீ நிர்மலன் இசையமைத்ததுடன் அவரே பாடலையும்
பாடியுள்ளார். இசை நவீனம் ஸ்ரீ நிர்மலன் இசையமைத்துப் பாடிய இரண்டாவது பாடல் இது. இசை நவீனம் ஸ்ரீ நிர்மலனை சிறந்த இசையமைப்பாளராக எனக்குப் பிடிக்கும். என்னுடைய அன்புத் தம்பி, இந்தப் பாடலின் மூலம் சிறந்த பாடகராகவும் என் மனதில் இடம் பிடித்து விட்டார். எத்தகைய பாடல்களையும் சிறப்பாகப் பாடக் கூடிய குரல் வளமும், ஆற்றலும் இவரிடம் உண்டு. இந்தப் பாடல், நானும் அன்புத் தம்பி இசை நவீனம் ஸ்ரீ நிர்மலனும் இணைந்து படைத்த 13வது பாடல். தொடர்ந்தும் பல பாடல்களில் இணையவுள்ளோம்.

இசை நவீனம் ஸ்ரீ நிர்மலனுடன் இணைந்து பாடியுள்ளார் எங்கள் வீட்டுப் பிள்ளை கிருசுயா. நான் ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்றால்; சுபர்த்தனா படைப்பகம் பாடல்களை வெளியிடுகின்ற போது என்னை விடவும் அதிகம் கொண்டாடுவது கிருசுயாதான். உண்மையான அன்போடு பளகக் கூடியவர். அதனால் எனது குடும்பப் பிள்ளையாகவே இவரை என்னால் பார்க்க முடிகின்றது. இந்தப் பாடலுக்குக் கிருசுயாவின் சிறிய தந்தை அழகேசன் அவர்கள் இசைப் பங்காற்றியதாலோ தெரியவில்லை; முந்தைய பாடல்களை விடவும் கிருசுயா சிறப்பாகப் பாடியுள்ளார். அடுத்த பாடலை இதிலும் சிறப்பாகப் பாடுவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

இந்தப் பாடலை விரும்பி... பகிர்ந்து... கருத்திடுகின்ற சொந்தங்களுக்கு இப்போதே நன்றி செலுத்துகின்றேன்.

*YOUTUBE - உசிரிலே* https://www.youtube.com/watch?v=w5Akt8OcJJE&feature=youtu.be

*சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள அடுத்த பாடல் *மனசுக்குள்ள அவதான்* இசை, இசை நவீனம் ஸ்ரீ நிர்மலன், குரல் லின்ரன், வெளியீடு... 24/12/2018*

-பிரியமுடன்
கி.தீபன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.