உன் வேலைய ஒழுங்கா செய் முதல்ல; ரிஷப் பண்ட்டை விளாசிய முன்னாள் வீரர் !

ஆஸ்திரேலிய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வதை நிறுத்திவிட்டு விக்கெட் கீப்பிங்கில் முதலில் கவனம் செலுத்துமாறு ரிஷப் பண்ட்டிற்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சஹா காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய தொடரில் விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருக்கும் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றும் வேலையை சரியாக செய்தாலும், தனது முக்கிய பணியான விக்கெட் கீப்பிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
இதனால் ரிஷப் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் ரிஷப் பண்டிற்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "கிரிக்கெட் ஒரு பாரம்பரிய விளையாட்டு. ரிஷப் பண்ட் தனது வேலையான விக்கெட் கீப்பிங்கில் முதலில் கவனம் செலுத்தட்டும். அதுவே இந்திய அணிக்கும் அவருக்கும் நல்லது. ஸ்லெட்ஜிங் செய்வது அவரது வேலை அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.