ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் வாழ்க்கை புகைப்படங்களில்

போர் கதாநாயகனும், அரசியல்வாதியின் மகனுமான ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ், அரசியல் தொழில்முறை வாழ்க்கையில் உயரிய திறமை கொண்டிருந்தவர். 1960களில் பிரதிநிதிகள் அவையில் இருக்கையை வென்று தேசிய அரசியலில் முதல்முறையாக கால் பதித்தார்.


தனது அரசியல் பார்வையில் தன்னைவிட முற்போக்கு எண்ணம் கொண்டிருந்த மனைவி பார்பரா, ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷூக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் கீழ் பல்வேறு ராஜிய பதவிகளில் பணிபுரிந்த பின்னர், ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது.

1976ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜெரால்டு ஃபோர்டு இவரை மத்திய உளவுத்துறை இயக்குநராக நியமித்தார்.
1980ம் ஆண்டு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக முயற்சித்தபோது ரோனால்டு ரீகன், ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷை தோற்கடித்தார்.

1980கள் முழுவதும் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் துணை அதிபராக பணியாற்றினார்.

1988ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றியால் அவரது அரசியல் வாழ்க்கை உச்சத்தை தொட்டது. இறுதியில் ரீகன்தான் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷிடம் ஆட்சி அதிகாரத்தை கையளித்தார்.

ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் வெளியுறவு கொள்கையில் பெற்ற வெற்றிகள் பெரிதும் குறிப்பிடப்படுபவை.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் மறைந்தார்
அமெரிக்காவுக்கு சர்வதேச நிலையை, வியட்நாம் போரில் ஏற்பட்ட பாதிப்புகளை மீட்டெடுத்த பெருமையை விமர்சகர்கள் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷூக்கு வழங்குகின்றனர்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்தபோது, ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் சோவியத் யூனியன் மற்றும் மிகாயில் கார்பச்சேஃவோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார்.

அவருக்கு முந்தைய அமெரிக்க அதிபரான ரோனால்ட் ரீகன் ரஷ்யாவை "தீய பேரரசு" என்று கூறியிருந்தார்.

ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷின் வெளியுறவு கொள்கை முதலாவது வளைகுடா போரால் வரையறுக்கப்பட்ட மனஉறுதியை அதிகரித்து ஈராக் மீதான வெற்றியோடு நிறைவடைந்தது.

ஆனால், 1992ம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரை, வரி விதிப்பில் மற்றம் உள்பட அவரது உள்நாட்டு கொள்கைளால் தடம்புரண்டது. இறுதியில் பில் கிளிண்டனுக்கு எதிரான போட்டியில் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் தோல்வியை தழுவினார்.

புஷ்ஷின் அரசியல் பாரம்பரியம் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் பதவியை விட்டு சென்ற பின்னரும் நீண்டகாலம் தொடர்ந்தது,

2000ம் ஆண்டு அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட அவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 பதவிக்காலம் அதிபராக பணியாற்றினார்.

அமெரிக்க பொது வாழ்வில் சிறந்த பங்களிப்பு வழங்குவதை ஜார்ஜ் புஷ் சீனியர் தொடர்து வந்தார்.

2011ம் ஆண்டு ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷூக்கு சுதந்திர பதக்க விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வழங்கி கௌரவித்தார்.

2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணியான பார்பரா புஷ் தனது 92வது வயதில் காலமானார்.

இந்த தம்பதியர் 70 ஆண்டுகளுக்கு மேலாக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்தவர்கள்.

93 வயதான முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் டெக்ஸாஸின் ஹூஸ்டனில் தனது மனைவிக்கு இறுதி சடங்குகள் நிறைவேறிய அடுத்த நாளே சுகவீனமடைந்தார்.

அங்கு அமெரிக்காவின் முன்னாள் 3 அதிபர்கள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகளோடு ஜார்ஜ் ஹெச்டபிள்யூ புஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தில் லௌரா புஷ், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன், ஹிலரி கிளிண்டன், பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமா ஆகியோர் உள்ளனர்.

தற்போதைய அமெரிக்க முதல் பெண்மணியான மெலானியா டிரம்பும் இதிலுள்ளார். இந்த இறுதி சடங்கில் அதிபர் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.