ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு நபர்கள் கிண்ணியாவில் கைது

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றிரவு (22) இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிண்ணியா, காக்காமுனை பகுதியை சேர்ந்த 49 வயதுடையவரும், 18 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கிண்ணியாவில் திருமணம் முடித்து வந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞரை கைது செய்தனர்.

இதேவேளை கைது செய்த இளைஞரை விசாரித்தபோது குடும்பஸ்தர் துவிச்சக்கரவண்டி யுடன் கைதுசெய்யப்பட்டதாகவும் குடும்பஸ்தரே ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.