முடங்கிய அமெரிக்க அரசு

டொனால்டு ட்ரம்ப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், அமெரிக்க அரசுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் ஊழியர்களுக்கான சம்பளம் கிடைக்காமல் போயுள்ளது.


மெக்சிகோ நாட்டு எல்லையில் எல்லைச் சுவர் அமைக்க 5 பில்லியன் டாலர் வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரியிருந்தார். இதற்கு நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் இதர பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. ட்ரம்ப்பின் எல்லைச் சுவர் கோரிக்கை மற்றும் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அந்நாட்டு காங்கிரஸ் சபை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் சுமூகத் தீர்வு எட்டப்படாததால் அமெரிக்க அரசுக்கு டிசம்பர் 22 முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் அமெரிக்க அரசுக்குக் கீழ் வேலை செய்யும் 8 லட்சம் ஊழியர்களுக்கான சம்பளம் கொடுக்கப்படாது என்றும் இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அரசின் இந்த முடக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாத நிலையில், “இது நீண்ட காலம் நீடிக்காது” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு முன்னர் பில் கிளிண்டனின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக 21 நாட்கள் அமெரிக்க அரசு முடங்கியிருந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட முடக்கங்கள் மிகக் குறைந்த நாட்கள் கொண்டதாகத்தான் இருந்தன. தற்போது அரசு முடங்கியுள்ளதால் அரசு ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இவர்களுக்கான சம்பளம் டிசம்பர் 23 முதல் ஜனவரி 5 வரையிலான வாரங்களுக்குக் கிடைக்கப்பெறாது என்று கூறப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.