உதவும் கரங்கள் அமைப்பின் அனா்த்த இடா் உதவி




உதவும் கரங்கள் அமைப்பு  முன்னெடுத்த உதவி வழங்கல் நேற்றையதினம் நடைபெற்றது.


யாழ் பல்கலைக்கழகத்தில் 2002ம் ஆண்டு பட்டம் பெற்று                              வெளியேறிய  முகாமைத்துவ மற்றும் வணிகபீட  பட்டதாரிகளின் ( தாயக, புலம்பெயா்)     உதவும் கரங்கள் அமைப்பும் (UOJ H.H) அய்ஷா அறக்கட்டளையும் இணைந்து அண்மைய அடைமழையினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிப்படைந்த மக்களுக்கு  380 000.00 ரூபா பெறுமதியான 190 பொதிகளை அந்தந்த பிரதேச செயலகங்களின் உதவியுடன் வழங்கியிருந்தனா். பல்கலைக்கழக கல்வியின் பின்னரும் தொடரும் நட்பும் அதனுாடான சமூகச் செயற்பாடுகளும் முன்மாதிரியான பாராட்டிற்குரிதொன்றாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.