பல்லவராயன்கட்டு ஜெயபுரம் பகுதியில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியச் செயலாளர் நிவாரண உதவி!

பூநகரிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்லவராயன்கட்டு ஜெயபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிப்புற்று ஜெயபுரம்
மகாவித்தியாலயத்தில் தங்கியுள்ள 41 குடும்பங்களுக்கு இன்றுமாலை உலர் உணவுப்பொதிகளை ஜெயபுரம் தெற்கின் முன்னாள் அபிவிருத்தியோகத்தரும்  வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியச் செயலாளர் சிவஸ்ரீ.ஜெ.மயூரக்குருக்கள் அவர்கள் வழங்கிவைத்தார். கிராம அலுவலர் மகாபரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் கேசவன்  ஆகியோர் இவற்றை வழங்கிவைத்தனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.