வெள்ள நிவாரணத்துடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத்தைப் பெற்றுக் கொண்டு வீடு செல்வதற்காகப் பேருந்தில் ஏறிய பெண் தவறி வீழ்ந்து படுகாயமடைந்தார்.


இந்தச் சம்பவம் வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணியில் இன்று நடந்துள்ளது.

குறித்த பெண் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் வெள்ள நிவாரணத்தைப் பெற்றுக்கொண்டு வீடு செல்வதற்காக பேருந்துத் தரிப்பிடத்தில் காத்திருந்தார்.

பேருந்து ஒன்று வருவதை அவதானித்து, அதனை மறித்து ஏற முற்பட்டார். அவர் பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் பேருந்து புறப்பட்டதால் தவறி வீழ்ந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறையிலிருந்து கேவில் நோக்சிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் அவர் ஏற முற்பட்டார். பின்னால் அரச பயனிகள் பேருந்து வருவதைக் கன்ட தனியார் பேருந்துச் சாரதி பேருந்தை எடுக்க முற்பட்டுள்ளார். அதனால் அவர் தவறி வீழ்ந்துள்ளார்.

காயமடைந்த பெண், மருதங்கேணி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.