வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தால் உதவி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் நேற்று வழங்கப்பட்டன.


வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ஊடாக இவை வழங்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு மல்லிகை தீவு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளுக்கு மீளத் திரும்பிய மக்களுக்கு இவை வழங்கப்பட்டன.

வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் செயலாளர் மா.கதிர்காமராஜா, உபதலைவர் ரி.கே.இராஜலிங்கம், சங்கத்தின் உறுப்பினர்களான செ.சபாநாதன், க.கிருபாகரன், ந.ஜனகன் ஆகியோர் சேகரித்த பொருள்களை சங்கத்தின் சார்பில் வழங்கி வைத்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.